காத்து வாங்கும் இன்ஜினியரிங் காலேஜ்கள்.. போதும்ப்பா.. 2 வருடங்களுக்கு தொழில்நுட்ப கல்லூரி துவங்க தடை
டெல்லி: இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு தொழில்நுட்ப கல்லூரிகளை துவங்க கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மொத்தம், 27 லட்சம் சீட்டுகள் உள்ளன. இளநிலை படிப்பில் 14 லட்சம் சீட்டுகள் இருக்கிறது. முதுநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்களும், டிப்ளமோ படிப்புகளுக்கு 11 லட்சம் இடங்கள் இருக்கின்றன.

சில ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியிடங்கள் 50 சதவிகிதத்திற்கு மேல் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் புதிதாக தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்க அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கமிட்டியின் தலைவர் பிவிஆர் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே தமிழகத்தில் உள்ள தொழிநுட்பக் கல்லூரிகளில்தான் அதிக இடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளுக்கு மொத்தமாக 2 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் 67 ஆயிரத்து 715 இடங்கள் காலியாக இருப்பதாகவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் இடங்களில் 58 ஆயிரத்து 314 இடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்களில் 57 ஆயிரத்து 259 இடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் தொழில்நுட்பக்கல்வி பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்து இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் 518 தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை உத்தரவாதம் இல்லாத நிலையில் பெரும்பாலான மாணவர்கள், பொறியியல் படிப்புகளை தவிர்த்து வருவதாக தெரிகிறது. இது போன்ற குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில், தொழில்நுட்ப கல்வி துறையில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே துறை சார்ந்தவர்களை கருத்தாக உள்ளது.
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications