அதிகரிக்கும் கொரோனா பரவல்.. குறைகிறதா பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அளவு? மத்திய அரசு திட்டம்?
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசிக்கும் இடையிலான கால அளவை குறைக்க தேசிய நோய்தடுப்பு ஆலோசனை கூழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 12 ஆயிரத்து 213 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 215ஆக உள்ளது.

கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 3 பேரும் மகாராஷ்டிராவில் 2 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்தனர். அதேபோல் தமிழகம், மேற்கு வங்கம், குஜராத், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசத்தில் தலா ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 195.67 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மார்ச் 16ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஏப்ரல் 10ம் தேதி முதல் 18 முதல் 59 வயது வரை உள்ள பொதுமக்களுக்கு, கொரோனா வைரஸ் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தவணைதடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். ஆனால் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவதில் மக்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால அளவை குறைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நோய்க்கட்டுப்பாடு குழுவினர் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசிக்கும் இடையிலான கால அளவை 6 மாதமாக குறைக்க பரிந்துக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த இறுதி முடிவு வரும் ஜூன் 29ஆம் தேதி எடுக்கப்படவுள்ளது.
முன்னதாக வெளிநாடு செல்வோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசிக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசிக்குமான கால அளவை, 90 நாட்களாக மத்திய அரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications