சோனியா காந்தி "வாய்ஸ்" கொடுத்ததும் உடனே பணிந்த சிபிஎஸ்இ.. வினாத்தாள் சர்ச்சையில் நடந்தது என்ன?
டெல்லி: பெண்களின் சுதந்திரத்துக்கு எதிரான கருத்துகள் சி.பி.எஸ்.இ வினாத்தாளில் இடம்பெற்றதற்கு லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாளில் பெண்கள் சுதந்திரம் தொடர்பான ஒரு கட்டுரை கொடுக்கப்பட்டு அதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
#WATCH | Congress interim chief Sonia Gandhi raises in Lok Sabha the issue of inclusion of a 'shockingly regressive passage' in CBSE's question paper for Grade 10 exam, demands withdrawal of the passage & apology
— ANI (@ANI) December 13, 2021
(Source: Sansad TV) pic.twitter.com/lO1Db4ty3q
.

வினாத்தாள் கருத்து என்ன?
அதாவது வீட்டில் பணியாளர்கள், குழந்தைகள் ஆகியோரிடத்தில் ஒழுக்கம் குறைவதற்கு பெண்களின் சுதந்திரம்தான் காரணம்- மனைவிகள் கணவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை பின்பற்றுவதில்லை. இளைஞர்கள் தாங்கள் விரும்பிய உலகில் வாழ நினைப்பதால் ஒழுக்க கேடு ஏற்படுகிறது என்பது உள்ளிட்ட கருத்துகள் இடம்பெற்றிருந்தன.

கடும் எதிர்ப்பு
இது நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ வினாத்தாளில் இத்தகைய நச்சு கருத்துகள் இடம்பெற்றுள்ளதற்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. லோக்சபாவில் சோனியா காந்தி இன்று இந்த பிரச்சனையை எழுப்பினார்.

லோக்சபாவில் சோனியா
அப்போது, இப்படியான ஒரு சர்ச்சைக்குரிய கேள்வித்தாளை உடனே சி.பி.எஸ்.இ. திரும்பப் பெற வேண்டும். இத்தகைய கருத்துகளுடன் வினாத்தாளை தயாரித்த சி.பி.எஸ்.இ நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சி.பி.எஸ்.இ-ன் இந்த வினாத்தாள் கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பணிந்தது சிபிஎஸ்இ
இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்குவதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றது குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும்; இந்த வினாவுக்காக முழு மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்குவோம். ஆங்கிலப் பாடத்திட்டத்துக்கான வல்லுநர்களின் குழுவை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications