விவசாயிகளுக்கு எதிராக பாஜகவினரை ஆயுதம் எடுக்க சொன்ன ஹரியானா அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு எதிராக பாஜகவினர் ஆயுதம் எடுக்க வேண்டும் என்று சொன்ன ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 10 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஹரியானா, உ.பி.யிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஹரியானாவில் ஆளும் பா.ஜ.க. அரசு, போராடும் விவசாயிகள் மீது போலீஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகிறது. போராடிய விவசாயிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
அப்போது பேசிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியினரும் ஆயுதங்களை கையில் எடுங்கள்.. போராடும் விவசாயிகளால் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் தாக்குதல் நடத்துங்கள்.. 500, 700, 1,000 பேர் என ஆயுதங்களை கையில் எடுங்க என்றார். ஒரு மாநில முதல்வரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இதையடுத்து தமது கருத்தை அவர் திரும்பப் பெற்றார்.
இந்த நிலையில்தான் ஹரியானா அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து பேசியிருக்கிறார். ஹரியானாவில் 806 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை இன்போசிஸ் நிறுவனம் கட்டியிருக்கிறது. இதனை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி ஹரியானாவில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நேர்மையான அரசு அமைந்திருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என கூறினார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்த மனோகர்லால் கட்டார் அரசுக்கு பிரதமர் மோடியின் இந்த பாராட்டு சற்று நிம்மதியைக் கொடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதேநேரத்தில் விவசாயிகளை கொடூரமாக ஒடுக்கும் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஹரியானா அரசை பிரதமர் மோடி பாராட்டி இருப்பது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications