ஜனாதிபதி தேர்தல்: மம்தா கூட்டத்துக்கு மார்க்., கம்யூனிஸ்ட் ‛ஜகா’! உறுதி செய்த சீதாராம் யெச்சூரி
டெல்லி: எதிர்க்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை களத்தில் இறக்குவது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் பங்கேற்க உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அதன் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்திய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட உள்ளார்.
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 ல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன.

பாஜகவில் குழு
ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்வதற்கு பாஜக முயன்று வருகிறது. இதற்காக அந்த கட்சியில் தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டார் இடம்பெற்றுள்ளனர். பாஜகவும் ஜனாதிபதி வேட்பாளர் உள்பட தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு
அதேநேரத்தில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும், இதற்கான ஆலோசனை கூட்டம் நாளை(ஜூன்15) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

‛ஜகா’ வாங்கிய கம்யூனிஸ்ட்
இந்த கூட்டத்தில் பங்கேற்க சிவசேனா மறுப்பு தெரிவித்து விட்டது. அதேநேரத்தில் ‛‛ஆலோசனை கூட்டம் தொடர்பாக பிற கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் மம்தா பானர்ஜி தன்னிச்சையாக முடிவெடுத்து உள்ளார்'' என குற்றம்சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. இதனை மீண்டும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛ எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சரத்பவார் மறுத்துிவிட்டார். மம்தா பானர்ஜி தலைமையிலான நாளைய ஆலோசனை கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்'' என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பங்கேற்பு
இதற்கிடையே மம்தா பானர்ஜியின் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஆலோசனை கூட்டத்துக்கான இன்று மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications