'பிரதமரே,உங்கள் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலைதான் 'வளர்ச்சியடைகிறது'.. பிரியங்கா காந்தி சாடல்
டெல்லி: 2 வாரங்களில் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை தான் வளர்ச்சியடைவதாகச் சாடியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே நாட்டில் ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மறுபுறம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேஸ் சிலிண்டர் விலை இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
இந்த ஆண்டு தொடக்கம் முதல் கேஸ் சிலிண்டர் விலை 190 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தான் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இப்போது வெறும் 2 வாரங்களில் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்படுவது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வர்த்தக ரீதியான சிலிண்டர் விலையும் 75 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டனம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றர். கேஸ் சிலிண்டர் விலை இப்படித் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தால், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாகச் சாடியுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

பிரியங்கா காந்தி விமர்சனம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கடுமையாகச் சாடிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "பிரதமரே, உங்கள் ஆட்சியில் இரண்டு வகையான வளர்ச்சி மட்டுமே நம் நாட்டில் நடைபெறுகிறது: ஒருபுறம் உங்கள் கோடீஸ்வர நண்பர்களின் வருமானம் வளர்ச்சி அடைந்து வருகிறது. மறுபுறம், சாதாரண மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இது வளர்ச்சி என்றால் இந்த வளர்ச்சியை விடுப்பில் அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி சாடல்
அதேபோல காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தைச் சாடியுள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "நம் நாட்டு மக்களை வெறும் வயிற்றுடன் தூங்கக் கட்டாயப்படுத்தும் ஒருவர் தான், இப்போது தனது கோடீஸ்வர நண்பர்களின் நிழலில் ஓய்வெடுக்கிறார். இப்போது, அநீதிக்கு எதிராக இந்த தேசம் ஒன்றுசேரத் தொடங்கியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
மறுபடியும் அடுப்பு தான் ஊதனுமா? இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! மத்திய அரசு எடுத்த முடிவு! -
எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.. சிலிண்டர் முன்பதிவு குறித்த உண்மைகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications