'பிரதமரே,உங்கள் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலைதான் 'வளர்ச்சியடைகிறது'.. பிரியங்கா காந்தி சாடல்
டெல்லி: 2 வாரங்களில் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை தான் வளர்ச்சியடைவதாகச் சாடியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே நாட்டில் ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மறுபுறம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேஸ் சிலிண்டர் விலை இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
இந்த ஆண்டு தொடக்கம் முதல் கேஸ் சிலிண்டர் விலை 190 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தான் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இப்போது வெறும் 2 வாரங்களில் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்படுவது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வர்த்தக ரீதியான சிலிண்டர் விலையும் 75 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டனம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றர். கேஸ் சிலிண்டர் விலை இப்படித் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தால், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாகச் சாடியுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

பிரியங்கா காந்தி விமர்சனம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கடுமையாகச் சாடிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "பிரதமரே, உங்கள் ஆட்சியில் இரண்டு வகையான வளர்ச்சி மட்டுமே நம் நாட்டில் நடைபெறுகிறது: ஒருபுறம் உங்கள் கோடீஸ்வர நண்பர்களின் வருமானம் வளர்ச்சி அடைந்து வருகிறது. மறுபுறம், சாதாரண மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இது வளர்ச்சி என்றால் இந்த வளர்ச்சியை விடுப்பில் அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி சாடல்
அதேபோல காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தைச் சாடியுள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "நம் நாட்டு மக்களை வெறும் வயிற்றுடன் தூங்கக் கட்டாயப்படுத்தும் ஒருவர் தான், இப்போது தனது கோடீஸ்வர நண்பர்களின் நிழலில் ஓய்வெடுக்கிறார். இப்போது, அநீதிக்கு எதிராக இந்த தேசம் ஒன்றுசேரத் தொடங்கியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications