ரபேல் கொள்முதல்.. ரூ.526 கோடி விமானத்தை ரூ. 1670 கோடிக்கு வாங்கியது ஏன்?.. ராகுல் காந்தி கேள்வி!
டெல்லி: ரபேல் விமானங்களை 526 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு பதிலாக ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்குகிறது என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா ரபேல் போர் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.மொத்தமாக 36 விமானங்களை இந்தியா ஆர்டர் செய்த நிலையில் இன்று 5 விமானங்கள் இந்தியா கொண்டு வரப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் அதி நவீன 4.5ம் தலைமுறையைச் சேர்ந்த ரபேல் போர் விமானங்கள் ஆகும் இது.

இன்று ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான தளத்திற்கு வந்தது. இந்த விமானங்கள் இந்தியா வந்ததை மக்கள் திருவிழா போல கொண்டாடினார்கள். அதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த ரபேல் ஒப்பந்தத்தை தொடக்கத்தில் குற்றஞ்சாட்டி வந்தவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துவிட்டதாக அவர், குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது ரபேல் விமான கொள்முதல் குறித்து காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

அதில், இந்திய விமானப்படை ரபேல் விமானங்களை வாங்கியதற்கு வாழ்த்துகள்.
இந்த நிலையில், மத்திய அரசு பின் வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று நம்புகிறேன்
1) ரபேல் விமானங்களை 526 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு பதிலாக ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்குகிறது .
2) 126 விமானங்களுக்கு பதில் ஏன் 36 விமானங்களை மத்திய அரசு வாங்குகிறது
3) ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தத்தை அளிக்காமல் ஏன் திவாலான் அணில் அம்பானி நிறுவனத்திற்கு ஏன் ரூ. 30000 கோடி ஓப்பந்தத்தை அளிக்க வேண்டும், என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications