ராஜ்யசபாவில் நீண்ட விவாதம்... அணை பாதுகாப்பு மசோதா கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றம்
டெல்லி: மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா மிக நீண்ட விவாதத்துக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் ராஜ்யசபாவில் இன்று நிறைவேறியது.
அணைகள் பாதுகாப்பு மசோதா என்பது நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் ஒரே சீராக பாதுகாப்பது தொடர்பானது. இந்த மசோதா 2010-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

மாநில உரிமைகள் பறிப்பு
இம்மசோதாவின் சரத்துப்படி அணைகள் பாதுகாப்பு உள்ளிட்ட நிர்வாகத்திற்காக அணைகள் பாதுகாப்பு தேசியக் குழு ஒன்று அமைக்கப்படும். தண்ணீர் என்பது மாநிலப் பட்டியலில் வரும் நிலையில் அணைகளை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் குரல். மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் இம்மசோதாவுக்கு கடுமையாக எதிர்க்கப்படுகிறது.

அதிமுக, திமுக கடும் எதிர்ப்பு
தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தார். அதேபோல் தமிழக சட்டசபையில் நடந்த விவாதங்களின் போது எதிர்க்கட்சி தலைவராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 2019-ம் ஆண்டு லோக்சபாவில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது இதனை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மீண்டும் அணை பாதுகாப்பு மசோதா
இந்த நிலையில் லோக்சபாவில் மீண்டும் அணை பாதுகாப்பு மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் மீண்டும் இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. இம்மசோதாவுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநில எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அணை பாதுகாப்புமசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி சிவா நோட்டீஸ்
முன்னதாக அணை பாதுகாப்பு மசோதாவை ராஜ்யசபா நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி திமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்திருந்தார். இது தொடர்பாக திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், அணை பாதுகாப்பு மசோதாவில் கண்காணிப்பு, சோதனை, செயல் முறை, பராமரிப்பு ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றினாலோ ராஜ்யசபாவில் அறிமுகம் செய்தாலோ ராஜ்யசபா நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் கொடுத்திருக்கிறேன் என்றார்.

தமிழகம் ஏன் எதிர்க்கிறது?
தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தார். அதேபோல் தமிழக சட்டசபையில் நடந்த விவாதங்களின் போது எதிர்க்கட்சி தலைவராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 2019-ம் ஆண்டு லோக்சபாவில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது இதனை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications