விமானத்தில் போக போறீங்களா.. ஆரோக்கிய சேது ஆப் உள்ளிட்ட 'இதெல்லாம்' கட்டாயம்.. மறந்துடாதீங்க !
டெல்லி: ஆரோக்கிய சேது செயலி இருந்தால் மட்டுமே விமானத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான போக்குவரத்து துறை அமைச்கம் அறிவித்துள்ளது.
Recommended Video
மே 25ம் தேதி முதல் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானத்தில் பயணிக்க புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி விமானத்தில் பயணிக்க கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்திருக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் டவுன்லோடு செய்யாமல் இருந்தால் டவுன்லோடு செய்தால் தான் பயணிக்க அனுமதிப்பார்கள்.
பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். பயணம் முடியும் வரை முககவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
விமான நிலையத்திற்குள் வாகனத்தை விட்டு இறங்கும் போதே உங்கள் ஆவணங்கள் மற்றும் இ ஆவணங்களை கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பிலேயே (கேட்டில்) பயணிகள் தெர்மல் ஸ்கிரீனிங் (வெப்பமானியால் சோதனை) செய்யப்படும் இடத்திற்கு வர வேண்டும்.
அதன்பிறகு அவர்கள் வெப்பமானியால் சோதிக்கப்படுவார்கள். அத்துடன் கேட்டில் நுழையும் போதே ஆரோக்கிய சேது ஆப்பை மொபைலில் நிறுவி இருக்க வேண்டும்.

ஒரு வேளை ஆரோக்கிய சேது ஆப் அவரது மொபைலில் இல்லை என்றால் கட்டாயம் அவர்கள் ஆரோக்கிய சேது ஆப் டவுன்லோடு செய்யும் இடத்திற்கு சென்று டவுன்லோடு செய்து நிறுவி உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகு தான் பயணிக்க அனுமுதிக்கப்படுவார்கள்.
ஒரு செக்-இன் பை மற்றும் ஒரு கேபின் பை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைனில் சரிபார்ப்பை உறுதிசெய்து போர்டிங் பாஸை பெற வேண்டும்.
பயணிகள் தாமதமாக வரக்கூடாது. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்கள் அல்லது கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தவர்கள் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.
பயணிகள் தாங்கள் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கவில்லை, எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்று அறிவித்த பின்னரே விமான நிறுவனங்கள் போர்டிங் பாஸ் வழங்கும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications