என்ன பாஸ்.. ஆர்பிஐயில் இருக்கீங்க.. இப்படியா பண்ணுவீங்க.. சர்ச்சையில் சிக்கிய எஸ். குருமூர்த்தி!
டிவிட்டரில் பொய்யான செய்தியை பகிர்ந்து ஆர்.பி.ஐ இயக்குனர்களில் ஒருவரான எஸ் குருமூர்த்தி பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
டெல்லி: டிவிட்டரில் பொய்யான செய்தியை பகிர்ந்து ஆர்.பி.ஐ இயக்குனர்களில் ஒருவரான எஸ் குருமூர்த்தி பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
துக்ளக் இதழின் ஆசிரியரும் ஆர்பிஐ நிர்வாக இயக்குனர்களில் ஒருவருமான எஸ். குருமூர்த்தி இன்று காலை டிவிட் ஒன்றை ஷேர் செய்து இருந்தார். தி பாஸ்டன் இதழில் வெளியான பொய்யான செய்தி பற்றிய டிவிட் ஆகும் இது.
இதில், பாஸ்டன் விமான நிலையத்தில் முன்னாள் பிரதமரின் மகன் பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை பகிர்ந்து யார் அந்த முன்னாள் பிரதமரின் மகன் என்று எஸ். குருமூர்த்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

எல்லாம் பொய்
இந்த செய்தி ஃபிரி திங்கர் என்ற இணைய பக்கம் மூலம் உருவாக்கப்பட்ட பொய்யான செய்தியாகும். இந்த இணைய பக்கத்தில் விளையாட்டிற்காக நிறைய பொய் செய்திகள் உருவாக்கப்படும் . இந்த பக்கத்தில் பலர் பல விதமான செய்திகளை உருவாக்குவார்கள். நான் பிரதமர் ஆகிவிட்டேன், எனக்கு ஆஸ்கர் விருது கொடுத்து இருக்கிறார்கள் என்று நிறைய பொய்யான செய்திகளை உருவாக்குவார்கள்.

எஸ் குருமூர்த்தி ஷேர்
இப்படி உருவாக்கப்பட்ட ஒரு பொய்யான செய்தியைத்தான் தற்போது எஸ் குருமூர்த்தி ஷேர் செய்து இருக்கிறார். இவர் இப்படி ஷேர் செய்ததை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள். என்ன பாஸ் உங்களுக்கு இந்த சின்ன விஷயம் கூட தெரியாதா, ஆர்பிஐல இருக்கீங்க? இப்படியா பண்ணுவீங்க என்று பலர் கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.
|
என்ன கிண்டல்
இதில் இன்னொரு நபர் இன்னும் ஒருபடி மேல் போய் ஆர்பிஐ இயக்குனர் குழுவில் இருக்கும் எஸ் குருமூர்த்தி பொய்யான செய்திகளை பரப்புகிறார் என்று செய்தியை உருவாக்கி அதை குருமூர்த்தியிடமே பகிர்ந்து இருக்கிறார். உங்களை பத்தியும் இதுல செய்தி வந்து இருக்கு பாருங்க என்பதை போல எஸ் குருமூர்த்தியை அவர் கிண்டல் செய்துள்ளார்.

டெலிட் செய்தார்
இந்த நிலையில் தொடர் விமர்சனங்களை அடுத்து தற்போது எஸ் குருமூர்த்தி தனது டிவிட்டை டெலிட் செய்துவிட்டார். நான் வெளியிட்ட செய்தியில் சந்தேகம் இருப்பதாக சிலர் குறிப்பிட்டதால் அதை நீக்கிவிடுகிறேன் என்று எஸ் குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications