சில மாதங்களில் அடுத்த தடுப்பூசி ரெடி... சோதனையை தொடங்கிய சீரம்... அதிரடி காட்டும் ஆதார் பூனவல்லா
டெல்லி: கொரோனா வைரசுக்கு எதிரான அடுத்த தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் கொரோனா பரவலின் வேகம் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் அலட்சியப் போக்கு, உருமாறிய கொரோனா ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது

தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், உலக நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குத் தடுப்பூசி உற்பத்தி இல்லை.
இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியை வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா அறிவித்துள்ளார். அமெரிக்காவின் நோவோவாக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் இந்தத் தடுப்பூசிக்கு கோவோவாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசியின் முதல்கட்ட சோதனைகள் பிரிட்டனில் நடத்தப்பட்டதாகவும். முதலில் பரவிய கொரோனாவுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி 96% பலன் அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தடுப்பூசியின் பலன் பிரிட்டன் கொரோனா வகைக்கு எதிராக 86.3% ஆகவும், தென்னாப்பிரிக்க வகைக்கு எதிராக 48.6% ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை இந்தியாவில் கடந்த வாரம் தொடங்கியுள்ளதாகவும் இதில் 1,140 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications