பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு.. பங்களிப்புக்கு இந்தியா தயார்.. உக்ரைன் அதிபரிடம் மோடி உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 8 மாதங்களாக உக்ரைன் ரஷியா போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதாக அந்நாட்டு அதிபர் புதின் அறிவித்தார்.

உக்ரைன் ரஷியா போர்

உக்ரைன் ரஷியா போர்

இதையடுத்து உக்ரைன் படைகள் தீவிரம் காட்டின. இப்படி மாதக்கணக்கில் இருநாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் போரால் சர்வதேச அளவில் விநியோக சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மற்றொரு பக்கம் உக்ரைனுக்கு ஆயுத, நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சு

ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சு

எனினும் பொருளாதார தடைகளை கண்டுக்கொள்ளாமல் ரயா ராணுவ நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் கூட அணு ஆயுதங்களை கூட பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று புதின் தெரிவித்து இருந்தார். போர் பதற்றம் தொடர்ந்து நீடித்துக்கொண்டே வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைனில் நிலவி வரும் சூழல் பற்றி இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.

ராணுவ நடவடிக்கை தீர்வாகாது

ராணுவ நடவடிக்கை தீர்வாகாது

எனினும் பொருளாதார தடைகளை கண்டுக்கொள்ளாமல் ரயா ராணுவ நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் கூட அணு ஆயுதங்களை கூட பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று புதின் தெரிவித்து இருந்தார். போர் பதற்றம் தொடர்ந்து நீடித்துக்கொண்டே வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைனில் நிலவி வரும் சூழல் பற்றி இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.

முடிவுக்கு கொண்டு வர ரஷியா விரும்புகிறது

முடிவுக்கு கொண்டு வர ரஷியா விரும்புகிறது

இதேபோல பிரதமர் மோடியின் கவலைகளை புரிந்து கொண்டிருப்பதாகவும் இந்த பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவே ரஷியா விரும்புகிறது என்றும் புதின் பதில் கூறியிருந்தார். இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதத்தில் உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியிருந்தார். அதன்பிறகு இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+