குமாரு, இந்தியாவை விட கெட்டியா பிடிச்சுக்கோ.. முக்கிய துறைகளில் முதலீடுகளை வாங்கிட போராடும் இலங்கை!
டெல்லி: இந்தியாவிடம் இருந்து மிக முக்கியமான துறைகளில் முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான பகீரத முயற்சிகளில் இலங்கை இறங்கி உள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில் கடன் சுமையில் சிக்கி தத்தளிக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு சுத்தமாக இல்லை என்கிற நிலை. இதனால் பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அளவுக்கு மோசமாகிவிட்டது.
இலங்கைக்கு அதிகமாக கடன் கொடுத்த சீனா, குறுகிய காலத்தில் திருப்பிச் செலுத்த நிர்பந்திக்கிறது. அப்படி செலுத்தாத சூழ்நிலையில் சீனா, இலங்கையில் மேற்கொண்டு வரும் திட்டப் பணிகள் மற்றும் அதை ஒட்டிய நிலப் பகுதிகளை கையகப்படுத்திக் கொள்கிறது. இதற்கு சிங்களர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிடம் தஞ்சம்
இதனால் இயல்பாகவே அண்டை நாடான இந்தியாவிடம் தஞ்சமடையும் கட்டாயத்துக்கு இலங்கை சென்றுவிட்டது. இந்தியாவிடம் நல்லுறவை வளர்த்து இந்தியாவுக்கான திட்டங்களை இலங்கையில் செயல்படுத்த அனுமதித்து பெருமளவு கடன் பெற வேண்டும்; முதலீடுகளை பெற வேண்டும் என்கிற யுக்தியுடன் களமிறங்கி இருக்கிறது இலங்கை.

அடடே நகர்வுகள்!
இதன் முதல்கட்டமாகவே திருகோணமலை எரிபொருள் எண்ணெய் டேங்குகளை இந்தியாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது இலங்கை. இந்தியாவுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாகவே மன்னார் வளைகுடாவில் சீனாவுக்கு கொடுத்திருந்த மெகா காற்றாலை திட்டத்தையும் ரத்து செய்தது இலங்கை. இந்த திட்டமும் இப்போது இந்தியா வசமாக உள்ளது.

பாதுகாப்பு துறை ஒப்பந்தம்
இதனிடையே பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் முனைப்பாக உள்ளது இலங்கை. இந்தியப் பெருங்கடலின் கேந்திர முக்கியத்துவ அடிப்படையில் இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றுக்கும் இலங்கை முயற்சித்து கொண்டிருக்கிறது. இருநாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளுதல், தகவல்கள் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரலாம் என விரும்புகிறது இலங்கை.

சுற்றுலாதுறையில் முதலீடுகள்
இலங்கைக்கான சுற்றுலா பயணிகளில் 25% இந்தியர்கள்தான். இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்தியாவுடனான சுற்றுலாதுறை சார் ஒப்பந்தங்களை விரைவுபடுத்தவும் இலங்கை விரும்புகிறதாம். இலங்கை சுற்றுலாத்துறையில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதன் மூலம் இதனை சாதிக்க முடியும் என கணக்குப் போடுகிறது இலங்கை. இப்படி முக்கியமான துறைகளில் இந்திய முதலீடுகளைப் பெறுவதற்காக அடுத்தடுத்த நகர்வுகளை இலங்கை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications