கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு எதிரான 3 மனுக்கள்- உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சென்னை மெரினா கடலில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யபப்ட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சென்னை மெரினா கடலில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைத்தால் மீன்வளம் பாதிக்கப்படும் என 3 பேர் வழக்கு தொடர்ந்தனர். ராமநாதபுரம், நல்லதம்பி, நாகர்கோவில் சூசை அந்தோணி, சென்னை தங்கம் ஆகியோர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கலைஞர் பேனா நினைவு சின்னத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் எனில் பசுமை தீர்ப்பாயத்தை நாடலாம் அல்லது உயர்நீதிமன்றத்தை நாடலாமே? எதற்காக உச்சநீதிமன்றத்தை நேரடியாக அணுக வேண்டும்? என நீதிபதிகள் கேள்வி கேட்டு 3 மனுக்களையும் டிஸ்மிஸ் செய்தனர்.












Click it and Unblock the Notifications