மோடி அரசை எப்போ கண்டிப்பீங்க? அமெரிக்க முஸ்லீம் எம்பி கேள்வி! "கவனிக்கிறோம்.." களமிறங்கிய அமெரிக்கா
டெல்லி: இந்தியாவில் நடக்கும் மத ரீதியான மோதல்கள்.. மத ரீதியான அழுத்தங்களை அமெரிக்கா கண்காணிக்க தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா எம்பி ஒருவர் இதை பற்றி பேச.. இப்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரே இந்த விவகாரத்தை பற்றி பேசி இருக்கிறார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் மத ரீதியான மோதல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. முன்பு இஸ்லாமியர்கள் குறி வைக்கப்பட்ட நிலையில்.. தற்போது ஜேஎன்யூவில் படிக்கும் இந்துக்கள் கூட குறி வைக்கப்பட்டு உள்ளனர். மாமிசம் சாப்பிடுவதே தவறானது என்பது போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ராம நவமி அன்று மசூதிகள் முன்னிலையில் கோஷம் எழுப்புவதும், மத்திய பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது, கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் மொத்தமாக புறக்கணிக்கப்படுவது என்று தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ராம நவமி
உலக நாடுகள் பல இந்தியாவில் நடக்கும் இந்த மத ரீதியான வெறுப்பு பிரச்சாரங்களை கவனித்து வரும் நிலையில்தான், இந்தியாவிற்கு எதிராக அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பி இல்ஹான் ஒமார் நாடாளுமன்றத்தில் கடுமையான விமர்சனங்களை வைத்தார். அதில், மனித உரிமை ரீதியான மோதல்கள், சிக்கல்கள் இருக்கும் நாடுகள் பற்றி நாம் இங்கே பேச வேண்டும். பத்திரிகையாளர்களின் சுதந்திரம், அவர்களின் செயல்பாடு பற்றி நாம் பேச வேண்டும்.

இல்ஹான் ஒமார்
இந்தியா பற்றி நாம் இங்கே பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். இன்னும் இஸ்லாமியர்களை மோடி அரசு எவ்வளவு அவமதித்தால், மோசமாக நடத்தினால் பிடன் அதற்கு எதிராக குரல் கொடுப்பார். இஸ்லாமியர்கள் இன்னும் எவ்வளவு கஷ்டங்களை அனுப்ப வேண்டும்? மோடிக்கு எதிராக எப்போது பேச போகிறீர்கள்?

இந்தியா முஸ்லீம் இல்ஹான் ஒமார்
என்ன நடந்தால் மோடி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு பேச துணியும். இந்தியாவில் முஸ்லீம் மைனாரிட்டிகளின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று தெரியுமா? இதேபோல்தான் நாம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் விஷயத்தில் அமைதியாக இருந்தோம். அதன்பின் நிலைமை அங்கு கைமீறி போனது. பின்னரே நாம் இதில் குரல் கொடுத்தோம். ஆனால் இப்போது இந்தியாவின் விவகாரத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நமக்கு வாய்ப்பு இருக்கும் போதே இதை தண்டிக்க வேண்டும்.

இந்தியா இஸ்லாமியர்கள்
எல்லா மதத்திற்காகவும், எல்லா இனத்திற்காகவும், எல்லா மொழிக்காகவும் நாம் ஒன்றாக இணைந்து நிற்க வேண்டும். உலகம் முழுக்க இருக்கும் மைனாரிட்டி மக்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும், என்று எம்பி இல்ஹான் ஒமார் கடுமையாக தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு உலக அளவில் வைரலான நிலையில்தான் தற்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தியா குறித்து முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கருத்து
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர் 2+2 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்களை கவனித்து வருகிறோம்.

கவனித்து வருகிறோம்
இந்தியாவில் சமீபத்தில் நடந்த சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சில அரசாங்க அமைப்புகள், போலீஸ், சிறை துறை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் விஷயங்களை கவனித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதை பற்றி விளக்கமாக பேச அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகரிக்கும் மத ரீதியான வெறுப்பு பிரச்சாரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்தான் இதை கண்காணிப்பதாக அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications