எருமை, பசு மாடு மோதிய பரபரப்பு அடங்கும் முன் அடுத்த சம்பவம்.. நடுவழியில் 'ஜாம்' ஆன வந்தே பாரத் ரயில்
டெல்லி: மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை சமீபத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஆனால், இவ்வாறு அர்ப்பணிக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்த ரயில்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளன. இரு தினங்களுக்கு முன்னர் தண்டவாளத்தில் குறுக்கே வந்த எருமைகள் மீது ரயில் மோதியது.
தற்போது இந்த ரயிலின் சக்கரம் ஒன்று 'ஜாம்' ஆன காரணத்தினால் பயணிகள் சதாப்தி ரயிலில் மாற்றியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பம்சம்
ஒரு வாரத்திற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் அதிவேகமான ரயிலை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'வந்தே பாரத்' என்று அழைக்கப்பட்ட இந்த ரயில், மணிக்கு சுமார் 180 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. மட்டுமல்லாது, 0லிருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 52 நொடிகளில் இந்த ரயில் எட்டிவிடும். ஜப்பானின் புல்லட் ரயில் இந்த வேகத்தை எட்ட 55 நொடிகளை எடுத்துக்கொள்ளும்.

எருமை மாடுகள்
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ரயில் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சில தினங்களிலேயே பல இன்னல்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த ரயில், பாட்வா - மணிநகர் இடையே சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தில் குறுக்கிட்ட எருமை மாடுகள் மீது சரமாரியாக மோதியது. இதில் மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மிகவும் தனித்துவம் வாய்ந்த தயாரிப்பாக கருதப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலின் முன்பாகம் அதே இடத்தில் கழன்று விழுந்தது.

பசு மாடுகள்
ரயிலின் முன்பாகம் கழன்று விழுந்தது குறித்து நெட்டிசன்கள் பலர் ரயில் உற்பத்தி குறித்து கடுமையாக விமர்சித்தனர். எதிர்க்கட்சிகளும் இதே விமர்சனத்தை முன்வைத்தது. இந்த சம்பவத்தையடுத்து எருமை மாடுகளின் அடையாளம் தெரியாத உரிமையாளர் மீது ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விபத்தையடுத்து ரயிலின் முன் பாகம் அன்றே சரி செய்யப்பட்டது. இதில் ரயில் என்ஜினுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று ரயில்வே துறை தெரிவித்திருந்தது.

கோளாறு
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு சம்பவம் அரங்கேறியது. அதாவது, காந்திநகர்-மும்பை இடையே நேற்று இந்த ரயில் இயக்கப்பட்டபோது குறுக்கே பசு மாடு வந்த நிலையில் இதேபோல ரயிலின் முன்பாகம் சேதமடைந்தது. இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்கள் விபத்துக்களாக நிகழ்ந்து வரும் நிலையில், மூன்றாவது நாளான இன்று ரயில் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ரயில் பாதியிலேயே நின்றுள்ளது.

சதாப்தி
இன்று காலை டெல்லியிலிருந்து - வாரணாசி நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் சக்கரம் ஒன்று 'ஜாம்' ஆனதன் காரணமாக 'வயர்' ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் காலை 7.30 மணிக்கு நடந்துள்ளது. உடனடியாக ரயிலை பரிசோதித்த ஊழியர்கள் அங்கிருந்து ரயில் மெதுவாக நகர்த்தி குர்ஜா ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அங்கு சதாப்தி விரைவு ரயில் கொண்டுவரப்பட்டு பயணிகள் அந்த ரயிலில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

சக்கரத்தில் பிரச்னை
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வடக்கு மத்திய ரயில்வே நிர்வாகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சிவம் சர்மா, "22436 என்ற வண்டி எண் கொண்ட வந்தே பாரத் டெல்லியிலிருந்து-வாரணாசி நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் ரயிலின் C8 பெட்டிக்கு கீழ் இருக்கும் சக்கரத்தில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு மெதுவான வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வேறு ரயிலுக்கு மாற்றப்பட்டனர்" என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ரயில் சேவை தொடர்ந்து பிரச்னையில் சிக்கி வருவதால் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்து தற்போது விமர்சனம் செய்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications