110 நாடுகளில் மீண்டும் கடைவிரித்த கொரோனா!'இவங்களுக்கு’ ரொம்ப சிக்கல் தான்! வார்னிங் கொடுக்கும் ஹூ !
டெல்லி : பல நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது உலகெங்கும் சுமார் 110 நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாகவும், கொரோனா பிஏ4, பிஏ5 போன்ற உருமாறிய வைரஸ்களால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பின் அளவானது மீண்டும் உச்சத்தை தொட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்குள் இருந்த பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
ஒமைக்ரான் பிஏ4, பிஏ5 வகை மாறுபாடு காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா 4வது அலை
இந்தியாவில் விரைவில் நான்காம் அலை உருவாகலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ள சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தேசிய அளவில் கொரோனா தினசரி பரவல் விகிதம் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது மட்டுமே, இந்தியாவில் கொரோனா 4ம் அலை உருவாகாமல் தடுப்பதற்கு சிறந்த தீர்வாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஹூ எச்சரிக்கை
இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது உலகெங்கும் சுமார் 110 நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாகவும், கொரோனா பிஏ4, பிஏ5 போன்ற உருமாறிய வைரஸ்களால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது குறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்," கொரோனா தொற்றுநோய் மாறுகிறது, ஆனால் அது முடிவடையவில்லை என்றார்

நிபுணர்கள் அச்சம்
கொரோனா வைரஸைக் கண்காணிப்பதற்கான எங்கள் திறனே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் மரபணு வரிசைகள் குறைந்து வருவதால், ஓமிக்ரானை கண்காணிப்பது கடினமாகி வருகிறது. கோவிட்19, பல இடங்களில்பிஏ4, பிஏ5 போன்ற உருமாறிய வைரஸ்களால் இயக்கப்படுகிறது, 110 நாடுகளில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன, இதனால் ஒட்டுமொத்த உலகளாவிய வழக்குகள் 20 சதவீதம் அதிகரித்துள்ளன.
Recommended Video

இறப்புகள் அதிகரிப்பு
உலக சுகாதார நிறுவனத்தில் 6 பிராந்தியங்களில் 3இல் இறப்புகள் அதிகரித்துள்ளன. அனைத்து நாடுகளும் தங்கள் மக்கள்தொகையில் குறைந்தது 70 சதவீதத்திற்கு தடுப்பூசி போடுமாறு ஹூ அழைப்பு விடுத்துள்ளது, ஆனால் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தடுப்பூசி போடப்படாமல் உள்ளனர், அவர்கள் வைரஸின் எதிர்கால அலைகளால் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறினார்.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications