Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

110 நாடுகளில் மீண்டும் கடைவிரித்த கொரோனா!'இவங்களுக்கு’ ரொம்ப சிக்கல் தான்! வார்னிங் கொடுக்கும் ஹூ !

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பல நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது உலகெங்கும் சுமார் 110 நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாகவும், கொரோனா பிஏ4, பிஏ5 போன்ற உருமாறிய வைரஸ்களால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பின் அளவானது மீண்டும் உச்சத்தை தொட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்குள் இருந்த பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ஒமைக்ரான் பிஏ4, பிஏ5 வகை மாறுபாடு காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா 4வது அலை

கொரோனா 4வது அலை

இந்தியாவில் விரைவில் நான்காம் அலை உருவாகலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ள சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தேசிய அளவில் கொரோனா தினசரி பரவல் விகிதம் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது மட்டுமே, இந்தியாவில் கொரோனா 4ம் அலை உருவாகாமல் தடுப்பதற்கு சிறந்த தீர்வாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 ஹூ எச்சரிக்கை

ஹூ எச்சரிக்கை

இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது உலகெங்கும் சுமார் 110 நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாகவும், கொரோனா பிஏ4, பிஏ5 போன்ற உருமாறிய வைரஸ்களால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது குறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்," கொரோனா தொற்றுநோய் மாறுகிறது, ஆனால் அது முடிவடையவில்லை என்றார்

நிபுணர்கள் அச்சம்

நிபுணர்கள் அச்சம்


கொரோனா வைரஸைக் கண்காணிப்பதற்கான எங்கள் திறனே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் மரபணு வரிசைகள் குறைந்து வருவதால், ஓமிக்ரானை கண்காணிப்பது கடினமாகி வருகிறது. கோவிட்19, பல இடங்களில்பிஏ4, பிஏ5 போன்ற உருமாறிய வைரஸ்களால் இயக்கப்படுகிறது, 110 நாடுகளில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன, இதனால் ஒட்டுமொத்த உலகளாவிய வழக்குகள் 20 சதவீதம் அதிகரித்துள்ளன.

Recommended Video

    இந்த கொரோனா வீரியம் அதிகம்.. முகக்கவசம் கட்டாயம் - மா சுப்பிரமணியன்
    இறப்புகள் அதிகரிப்பு

    இறப்புகள் அதிகரிப்பு

    உலக சுகாதார நிறுவனத்தில் 6 பிராந்தியங்களில் 3இல் இறப்புகள் அதிகரித்துள்ளன. அனைத்து நாடுகளும் தங்கள் மக்கள்தொகையில் குறைந்தது 70 சதவீதத்திற்கு தடுப்பூசி போடுமாறு ஹூ அழைப்பு விடுத்துள்ளது, ஆனால் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தடுப்பூசி போடப்படாமல் உள்ளனர், அவர்கள் வைரஸின் எதிர்கால அலைகளால் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+