அதிதீவிர புயலாக மாறியது யாஸ்..இன்று கரையை கடக்கிறது..சென்னையில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது
டெல்லி: வங்காள விரிகுடா கடலில் உருவாகிய யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறியது. ஒடிசா - மேற்கு வங்க கடற்கரைகளில் பாரதீப், சாகர் தீவுகளுக்கு இடையே இன்று மதியம் கரையை கடக்கிறது.
கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா கடலில் உருவாகிய யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இரவுப்படி யாஸ் புயல் 15 கி.மீ வேகத்தில் வடக்கு, வடக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது.

ஒடிசா - மேற்கு வங்க கடற்கரைகளில் பாரதீப், சாகர் தீவுகளுக்கு இடையே இன்று மதியம் யாஸ் புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு சுமார் 165 கி.மீ. வேகத்தில் காற்றுவீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்கம், ஒடிசா மாநில கடற்கரையோரம் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து மட்டும் 9 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாஸ் புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. அங்கு கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயாராக உள்ளனர்.
இதற்கிடையே சென்னையில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்தது. யாரும் நடந்து செல்ல வேண்டாம் என்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லுமாறும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications