சிறார்களுக்கான தடுப்பூசி ரெடி.. ஜைடஸ் காடிலா தடுபூசிக்கு விரைவில் அனுமதி
டெல்லி: பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள ஜைடஸ் காடிலா வேக்சினுக்கு இந்த வாரத்தில் ஒப்புதல் அளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படும்பட்சத்தில் உலகிலேயே DNA தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா வேக்சின் என்ற சிறப்பை பெறும்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் ஏற்பட்ட கொரோனா 2ஆம் அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்திற்குச் சென்றது.
வேக்சின் பணிகளில் மத்திய அரசு காட்டிய அலட்சியமே போனதே 2ஆம் அலை இந்தளவுக்கு மோசமான நிலைக்குச் செல்ல முக்கிய காரணம் என பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன.

அனைவருக்கும் வேக்சின்
இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்திருந்தது. அதன் பின்னரே, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வேக்சின்களில் 75% மத்திய அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு விநியோகிக்கும் என அறிவிக்கப்பட்டது. இருந்தாலும்கூட, நாட்டில் இருந்த தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வேக்சின் உற்பத்தி இல்லை. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வேக்சின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள்
இதனால், வேக்சின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு வேக்சின் உற்பத்தி இன்னும் சில வாரங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பல புதிய வேக்சின்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தவிர ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய வேக்சின்களுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜைடஸ் காடிலா
இந்நிலையில், ஐந்தாவது தடுப்பூசியாக ஜைடஸ் காடிலா கொரோனா தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜைடஸ் காடிலா நிறுவனம் அவரசக்கால அனுமதி வேண்டிக் கடந்த ஜூலை 1ஆம் தேதி விண்ணப்பித்திருந்தது. மூன்றாம்கட்ட மருத்துவ சோதனையில் ஜைடஸ் காடிலா தடுப்பூசி சுமார் 66.6% வரை தடுப்பாற்றல் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் DNA வேக்சின்
கோவாக்சின், கோவிஷீல்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் 2 டோஸ்களாக அளிக்கப்படும் நிலையில், இந்த ஜைடஸ் காடிலா தடுப்பூசி 3 டோஸ்களாக அளிக்கப்பட வேண்டும். இந்த வேக்சினுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்பட்சத்தில் உலகிலேயே DNA தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா வேக்சின் என்ற சிறப்பை இது பெறும். அதேபோல மற்ற வேக்சின்கலுடன் ஒப்பிடுகையில், இந்த வேக்சின் தடுப்பாற்றல் குறைவு என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறார்களுக்கான வேக்சின்
அதேபோல 12 முதல் 18 வயதுடைய சிறார்கள் மத்தியிலும் இந்த ஜைடஸ் காடிலா நிறுவனம் வேக்சின் சோதனையை நடத்தியுள்ளது. இந்த வேக்சின் மூலம் 12 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் முதல் சிறார்களுக்கு வேக்சின் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேக்சின் அச்சம்
இந்தியாவில் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட முதல் சில மாதங்கள் தடுப்பூசி பற்றிய அச்சம் மக்களிடையே நிலவியது. இருப்பினும், அதன் பிறகு, குறிப்பாக 2ஆம் அலைக்குப் பிறகு வேக்சின் போட்டுக் கொள்ள மக்களிடையே ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது. பல இடங்களில் வேக்சின் இல்லாததால் மக்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications