இரவல் குழந்தை..ஏக்கத்தில் சைக்கோவான கிருத்திகா! கூடவே இருந்த குமாரு! தடதட திண்டுக்கல்..போலீஸ் ஆக்சன்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : கடந்த மாதம் நான்காம் தேதி நான்கு வயது சிறுமி ஷிவானி மர்மமான முறையில் உடலில் தீக்காயங்களுடன் இறந்த வழக்கில் கணவன் மனைவியான ராஜேஷ்குமார் கிருத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் கௌரி தம்பதிக்கு ஷிவானி என்ற 4 வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் இவர்களது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மனைவி கீர்த்திகா என்பவர், பல்லடத்துக்கு அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார் என கூறப்படுகிறது.

திண்டுக்கல்லில் அதிர்ச்சி

திண்டுக்கல்லில் அதிர்ச்சி

திருமணம் நடந்து பல ஆண்டுகள் ஆகியும் ராஜேஷ்குமார் மனைவி கீர்த்திகா தம்பதியினருக்கு குழந்தை இல்லாத நிலையில், அடிக்கடி வீட்டிற்கு வரும் போது, சிறுமி ஷிவானியுடன் கீர்த்திகா நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அவர்களின் வீட்டிற்கு வந்த கீர்த்திகா ஷிவானியை தன்னுடன் ஊருக்கு அழைத்துச் சென்று சிறிது நாள் வைத்திருந்து விட்டு மீண்டும் கொண்டு வந்து விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

மர்ம மரணம்

மர்ம மரணம்

சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக ஷிவானி அவர்கள் வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று ஷிவானி வீட்டில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார் கீர்த்திகா. இந்நிலையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை சோதித்த போது சிறுமியின் உடலில் பல இடங்களில் சூடு வைத்த தீக்காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன மருத்துவர்கள் இதுகுறித்து கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர்.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

இந்த நிலையில் மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும் சிகிச்சையில் இருந்த ஷிவானி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் ராஜேஷ் குமார்-கீர்த்திகா தம்பதியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இந்த நிலையில் குழந்தை இல்லாததால் பல நாட்களாக ஏக்கத்தில் இருந்த ராஜேஷ்குமார் - கீர்த்தி தம்பதியினர் பிரகாஷின் குழந்தை ஷிவானியை அழைத்து வந்து கொடுமை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காரணம் சிறுமியின் உடலில் சூடு வைத்த காயங்களோடு மேலும் பல காயங்களும் உள்ளதால் இது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. விசாரணைக்கு பிறகு கணவன் மனைவியான ராஜேஷ்குமார் கிருத்திகா சிறுமியை கொடூரமாகக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

குண்டர் சட்டம்

குண்டர் சட்டம்

கணவன் மனைவியான ராஜேஷ்குமார் கீர்த்திகாவை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி முயற்சியால் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர் உத்தரவின் பேரில் இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான் கொலை வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+