அதிரடி.. திண்டுக்கல்லில் பேனர் வைக்க தடை.. திமுகவினருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவு.. ஏன்?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவினர் கழக நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்க கூடாது என்றும், தற்போது பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தால் அதனை உடனே அகற்ற வேண்டும் என திமுவின் துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ பெரியசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பேனர் கலாசாரம் அதிகரித்துள்ளது. விசேஷ நிகழ்ச்சிகள் முதல் துக்க நிகழ்ச்சிகள் வரை எங்கும், எதிலும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகளும் பேனர் கலாச்சாரத்தை தூக்கி பிடித்துள்ளன. இந்த பேனர் கலாசாரத்தை ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்றி வருகின்றன.

வரவேற்பு பேனர்கள்
குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்களின் நிகழ்ச்சிகளில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்படுகின்றன. மேலும் நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்புகள் முன்பு நோட்டீசாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பல இடங்களில் பேனர்களாக மாறியுள்ளன. அதாவது நகரின் முக்கிய இடங்களில் நிகழ்ச்சி தொடர்பான விபரங்களும் மெகா சைஸ் பேனர்கள் வைக்கப்படும் சம்பவங்கள் இன்றும் கூட நடைமுறையில் உள்னள.

முற்றிலும் ஒழியவில்லை
தமிழகத்தில் பேனர் விழுந்து உயிர் பலி ஏற்பட்டுள்ளதோடு மக்கள் படுகாயங்கள் அடைந்த வரலாறு தமிழகத்தில் உள்ள நிலையில் தற்போதும் பேனர் வைப்பது நிறுத்தப்படவில்லை. இப்போதும் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் உள்ளன. மேலும் இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் போடப்பட்டு பல்வேறு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் கூட பேனர் கலாச்சாரம் இன்னும் தமிழகத்தில் இருந்து முழுவதுமாக ஒழிந்து போகவில்லை.

பேனர் வைக்க தடை - ஐ பெரியசாமி உத்தரவு
இந்நிலையில் தான் திமுகவின் துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ பெரியசாமி இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதில், ‛‛திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கழக நிர்வாிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் அனைவரும் கழக நிகழ்ச்சிகளில் எக்காரணத்தை கொண்டும் யாரும் பேனர்கள் வைக்கக்கூடாது. கழக கொடிகளை மட்டுமே பயன்டுத்த வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றம் கழக உடன்பிறப்புகள் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனே தங்களது பேனர்களை அப்புறப்படுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார். பேனர் தொடர்பாக ஏற்படும் விபத்துகளையும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்பு நடந்தது என்ன?
முன்னதாக தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை கைவிட திமுக வலியுறுத்தி இருந்தது. கடந்த ஆண்டு திமுகவின் கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்த ஆர் எஸ் பாரதி, ‛பேனர் வைக்கும் கலாச்சாரத்தை திமுகவினர் முற்றிலும் கைவிட வேண்டும். பேனர் வைக்கக்கூடாது என்ற அறிவுறுத்தலை மீறுவோர் யாராக இருந்தாலும் தலைமைக் கழகத்தின் நடவடிக்கை பாயும்'' என எச்சரித்து இருந்தார். இருப்பினும் ஆங்காங்கே கட்சியினர் பேனர் வைப்பது அவ்வப்போது நடந்து வரும் நிலையில் தான் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பேனர் வைக்க கூடாது என அமைச்சர் ஐ பெரியசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications