Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலில் விழுந்த இளைஞரை தூக்கி விட்டு அவரது காலை தொட்டு வணங்கிய அண்ணாமலை.. “கண்டிப்பா செய்றேன்” உறுதி!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மலைவாழ் சமூக இளைஞரின் காலை தொட்டு வணங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சோளகர் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டார்.

அப்போது, அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்த அந்த மலைவாழ் இளைஞர் ஒருவர் திடீரென்று அண்ணாமலையின் காலில் விழுந்து வணங்கினார்.

இதனால் பதறிப்போன அண்ணாமலை, பதிலுக்கு அவரின் காலை தொட்டு வணங்கியதோடு, அந்த இளைஞரிடம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

மலைவாழ் பகுதிகளுக்குச் சென்ற அண்ணாமலை

மலைவாழ் பகுதிகளுக்குச் சென்ற அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு, மலைவாழ் மக்கள் வசிக்கும் தாமரைக்கரை பகுதிக்குச் சென்றார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்தார். இங்குள்ள மக்களில் சோளகர், லிங்காயத்து, இந்து மலையாளி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.

அண்ணாமலையிடம் கண்ணீர் விட்ட இளைஞர்

அண்ணாமலையிடம் கண்ணீர் விட்ட இளைஞர்

இந்து மலையாளி சமூகத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு மற்ற மாவட்டங்களில் வழங்கப்படுவது போல் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இதனால் கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று கண்ணீருடன் அண்ணாமலையிடம் கோரிக்கை மனு அளித்தார் அந்த இளைஞர். அண்ணாமலை அவரது கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு, அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறியபடியே, அந்த கோரிக்கை மனுவை பிரித்து படித்தார்.

திடீரென காலில் விழுந்து

திடீரென காலில் விழுந்து

பின்னர், உங்கள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என்று அண்ணாமலை சொன்னதும், அவரது காலில் விழுந்தார் அந்த இளைஞர். உடனே பதறிப்போய் அவரை தூக்கி விட்ட அண்ணாமலை, அவரது காலை தொட்டு கும்பிட்டார். கண்ணீருடன் நின்ற அந்த இளைஞருக்கு ஆறுதல் கூறி, நிச்சயமாக தேவையான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார் அண்ணாமலை.

களி சாப்பிட்ட அண்ணாமலை

களி சாப்பிட்ட அண்ணாமலை

பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த சோளகர் சமூகத்தைச் சேர்ந்த பூமிகா வெள்ளையன் வீட்டிற்குச் சென்று, அந்த மலைவாழ் குடும்பத்தினரிடம், அவர்களின் அன்றாட உணவான களியை கேட்டு வாங்கி சாப்பிட்டார் அண்ணாமலை. தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+