டிராலி சூட்கேசுக்குள் காதலன் சடலம்..அசால்டாக உருட்டிகொண்டு போன பெண்.. அதிர்ந்துபோன போலீசார்
காசியாபாத்: டிராலி சூட்கேசுக்குள் ஆண் சடலத்தை வெட்டி எடுத்துக்கொண்டு போன பெண்ணை காசியாபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணத்தை அந்த பெண் சொன்னது கேட்டு அதிர்ந்து போயுள்ளனர் காவல்துறையினர்.
காவல்துறையினர் பிடியில் சிக்கிய பெண்ணின் பெயர் ப்ரீத்தி சர்மா என்பதாகும். தனது காதலன் ஃபெரோஸ் என்பவரைத்தான் கொலை செய்து வெட்டி சூட்கேஸில் எடுத்துச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.
ப்ரீத்தி சர்மா தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஃபெரோஸ் உடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார். ஃபெரோஸை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்த ப்ரீத்தி சர்மா, அவரிடம் பேசியுள்ளார். தினம் தினம் ப்ரீத்தியின் தொந்தரவு அதிகரிக்கவே, கோபப்பட்ட ஃபெரோஸ் ப்ரீத்தி சர்மாவை திட்டியுள்ளார்.
உன்னுடைய முதல் கணவனுக்கு நீ விசுவாசமாக இருக்கவில்லை. விவாகரத்து வாங்கி விட்டு என்னுடன் வாழ்ந்து வந்தாய். என்னை திருமணம் செய்து கொண்ட பின்னர் எனக்கு விசுவாசமாக இருப்பாய் என்பது என்ன நிச்சயம் என்று கேட்டாரம் ஃபெரோஸ்.
அதைக்கேட்டு ஆத்திரமடைந்த ப்ரீத்தி தன்னை அவமானப்படுத்திய ஃபெரோசின் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்தார். சடலத்தை கொண்டு போய் யாருக்கும் தெரியாமல் போட்டு விட நினைத்த ப்ரீத்தி சூட்கேசை தள்ளிக்கொண்டு போகும் போலீசில் மாட்டிக்கொண்டார்.
இவரைத்திருமணம் செய்ய மறுத்ததால் அவரை வெட்டி, உடலை சூட்கேஸில் வைத்துச்சென்றுள்ளார் என்பதும் தெரியவந்தது. ஃபெரோஸின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். ப்ரீத்தி சர்மாவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு பக்கம் பாஜக ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தை 'லவ் ஜிஹாத்' எனக்கூறி வருகின்றனர். இந்துப்பெண்ணை இஸ்லாமிய இளைஞர் திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றி விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.