கோயில்கள் மேல் மசூதிகளா? எதற்கும் ஆதாரம் இல்ல -பாஜக பிரமுகரின் அவதூறை அம்பலப்படுத்திய தொல்லியல் துறை
ஐதராபாத்: மசூதிகளை தோண்டி பார்த்தால் சிவலிங்கம் கிடைக்கும் என தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கூறிய நிலையில், இந்து மதம்சார்ந்த இடங்களில் தொன்மையான மசூதிகள் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என தொல்லியல்துறை தெரிவித்து இருக்கிறது.
பாபர் மசூதி தடைக்கு பிறகு அடுத்த இலக்கு என பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியையும், மதுராவில் உள்ள ஈத்கா மசூதியையும் சுட்டிக்காட்டினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இதற்கு அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் கட்டிய கியான்வாபி மசூதி இருக்கிறது.

கியான்வாபி மசூதி
சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக பேசப்பட்டு வந்த இந்த மசூதிதான் சர்ச்சைகளுக்கு இலக்காகி இருக்கிறது. அதாவது கியான்வாபி மசூதி இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக வாரணாசி நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட ஆய்வில் சிவலிங்கம் போன்ற வடிவம் இருந்ததாக கூறி அதற்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈத்கா மசூதி
இதனை தொடர்ந்து மதுராவில் உள்ள பழமையான ஈத்கா மசூதி இருக்கும் இடம் கிருஷ்ணர் பிறந்தது எனக்கூறி வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது. அண்மையில் காசிக்கு சென்ற பாஜக ஆதரவாளரான நடிகை கங்கனா ரனாவத், "அயோத்தியில் ராமர் எங்கும், எதிலும் நிறைந்து இருப்பதை போன்றே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் நிறைந்து உள்ளனர். ஹரஹர மஹாதேவ்." என்றார்.

தாஜ்மஹால்
இதேபோல் முகலாய பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜுக்காக உலக அதிசயங்களுல் ஒன்றான தாஜ்மஹாலை கட்டினார். இந்த நிலையில் தாஜ்ஹாலுக்கு அடியில் பூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படும் சுமார் 22 அறைகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என பாஜக பிரமுகர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது. இதேபோல் குதுப் மினார், கர்நாடகாவில் உள்ள மசூதி என பல மசூதிகள், முகலாயர் கால கட்டிடங்கள் இருக்கும் இடங்களில் கோயில்கள் இருந்ததாக பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

தொல்லியல்துறை விளக்கம்
இதனிடையே தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய், "மசூதிகளை தோண்டி பார்த்தால் சிவலிங்கை இருக்கலாம்" எனக்கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக ஆர்வலர் ராபின் ஷாச்யூஸ் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ்,"தெலுங்கானாவில் உள்ள இந்து மத தலங்களில் மசூதிகள் கட்டப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கமளித்து இருக்கும் தொல்லியல் துறை, தெலுங்கானாவில் இருக்கும் தொன்மையான மசூதிகள் இந்து மதம் சார்ந்த இடங்களில் கட்டப்பட்டதற்கான ஆதாரம் இல்லை."என்று கூறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications