நான் அப்படி சொல்லல! பாண்டவர்கள், கவுரவர்கள் யார்? திரெளபதி சர்ச்சைக்கு ராம் கோபால் வர்மா விளக்கம்
ஐதராபாத்: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது பதிவுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்தமாதம் நிறைவு பெறுகிறது. புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் ஜூலை 18 ல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் ஜூலை 21ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திரெளபதி முர்மு
பாஜகவின் தேசிய ஜனாநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரெளபதி முர்மு களம் இறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக போட்டியிட உள்ளார். இதில் திரெளபதி முர்மு வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில் யஷ்வந்த் சின்ஹா நாளை வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவ்லகள் வெளியாகி உள்ளன.

சர்ச்சை பதிவு
இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் பெற்ற திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் கடந்த 22ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ ஒருவேளை திரெளபதி ஜனாதிபதியானால் பாண்டவர்கள் யார்?, அதோடு மிகவும் முக்கியமாக கவுரவர்கள் யார்?'' என குறிப்பிட்டு இருந்தார்.

போலீசில் புகார்
ராம் கோபால் வர்மாவின் இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் ஐதராபாத் அருகே அபிட்ஸ் போலீஸ் நிலையத்தில் பாஜக தலைவர் குதூர் நாராயண ரெட்டி மற்றுமு் நாண்டேஸ்வர் கவுட் ஆகியோர் புகார் செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் மனதையும் புண்படுத்தவில்லை
இந்நிலையில் தனது டுவிட்டர் பதிவு குறித்து ராம்கோபால் வர்மா மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛மகபாரதத்தில் திரெளபதி எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம். இந்த பெயர் மிகவும் அரிதானது என்பதால் அதனுடன் தொடர்புடைய கதாபாத்திரங்களை நான் நினைவுப்படுத்தி கூறினேன். இத்தகைய பதிவை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் கூறவி்லை'' என்றார்.
-
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications