"குடும்ப அரசியல் சாபக்கேடு! அதை செய்பவர் கேசிஆர்! மூடநம்பிக்கை இல்லாத துறவி யோகி!" பிரதமர் பாராட்டு
ஹைதராபாத்: தெலங்கானாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கேசிஆர் குடும்ப அரசியல் செய்வதாக மறைமுகமாகத் தாக்கி பேசினார்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையின் புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் பயணமாகச் சென்னை வருகிறார். முன்னதாக அவர் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் சென்றிருந்தார்.
ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் பிஸ்னஸ் ஸ்கூல் தொடங்கி 20 வருடம் ஆனதை கொண்டாடியும் வகையில் நடக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி
இதையடுத்து பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தெலங்கானா போராட்டம் என்பது ஒரு குடும்பம் மட்டும் ஆட்சி செய்வதற்காக இல்லை. குடும்ப அரசியல் காரணமாக நாட்டின் இளைஞர்களுக்கு அரசியலில் எந்தவொரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. குடும்ப கட்சிகள் தங்கள் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றன.

குடும்ப அரசியல்
ஏழை மக்களைப் பற்றிக் கவலைப்படாத இந்த கட்சிகள், ஒரே குடும்பம் எப்படி ஆட்சியில் தொடர முடியும் என்பது குறித்தும் எவ்வளவு தூரம் கொள்ளையடிக்கலாம் என்பது குறித்தும் தான் அரசியல் செய்கின்றன. அவர்களுக்கு மக்களின் வளர்ச்சியில் எந்தவொரு ஆர்வமும் இல்லை. குடும்ப அரசியல் என்பது வெறும் அரசியல் பிரச்சனை மட்டுமல்ல. ஜனநாயகத்திற்கும் இளைஞர்களுக்கும் மிகப்பெரிய எதிரியும் கூட! ஒரு குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை நம் நாடு பார்த்திருக்கிறது.

குறி வைக்கப்படும் பாஜக
கேசிஆர் அரசு தொடர்ச்சியாக ஊழல் செய்து வருகிறது. தெலங்கானா மக்கள் இவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் உள்ள பாஜகவினர் அரசியல் ரீதியாகக் குறிவைக்கப்படுகின்றனர். இந்த குடும்ப கட்சிகள் குறிப்பிட்ட பிரிவினரைத் திருப்திப்படுத்தும் அரசியலைச் செய்து வருகிறது. அவர்கள் தங்கள் செல்வத்தை நிரப்புவதில் தான் மும்முரமாக உள்ளன. அதே நேரத்தில் பாஜக தெலங்கானாவை ஐடி ஹப்பாக மாற்ற விரும்புகிறது.

மூடநம்பிக்கை
மூடநம்பிக்கை கொண்டவர் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர்களால் உழைக்க முடியாது. எனக்கு அறிவியலில் நம்பிக்கை உள்ளது. மூடநம்பிக்கையில் நம்பிக்கை இல்லாத துறவியான யோகி ஆதித்யநாத்தையும் வாழ்த்துகிறேன். இதுபோன்ற மூடநம்பிக்கை கொண்டவர்களிடம் இருந்து தெலுங்கானாவை காப்பாற்ற வேண்டும்" என்று மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

கேசிஆரின் குடும்பம்
தெலுங்கானா முதலமைச்சரின் மகன் கே.டி.ராமராவ் சிர்சில்லா சட்டமன்ற உறுப்பினராகவும், ஐடி அமைச்சராகவும் உள்ளார். நிஜாமாபாத்தில் இருந்து எம்.பி.யாக இருந்த கேசிஆரின் மகள் கல்வகுந்த்லா கவிதா, தற்போது நிஜாமாபாத் சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளார். கேசிஆரின் மருமகன் ஹரிஷ் ராவ், சித்திபேட்டை எம்.எல்.ஏ ஆகவும் மற்றும் தெலுங்கானாவின் நிதி அமைச்சராகவும் உள்ளார்.
Recommended Video

வரவேற்கவில்லை
ஹைதராபாத்தில் பிரதமர் மோடியை வரவேற்கத் தெலுங்கானா முதல்வர் கே சந்திர சேகர ராவ் செல்லவில்லை. கர்நாடகா சென்று, அங்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடாவை கேசிஆர் சந்திக்கிறார். இதனால் அவர் பிரதமரை வரவேற்கச் செல்லவில்லை. கடந்த 4 மாதங்களில் இரண்டாவது முறையாக தெலங்கானா முதல்வர் கேசிஆர் பிரதமர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைத் தவிர்த்துள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications