Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதை மருந்து கொடுத்து 3 நாள்! இருட்டறையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! ஆளும்கட்சி பிரமுகர் மகன் கைது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் சூர்யாபேட்டை மாவட்டம் கோடாட் நகரில் உள்ள அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பிரமுகரின் மகனும், அவரது நண்பரும் சேர்ந்து 20 வயது பெண்ணை கடத்திச் சென்று போதை மருந்து கொடுத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்த கொடுமையானது அதிக அளவில் நடைபெறுவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன் தனது நண்பர்களுடன் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தெலுங்கானாவில் அதிர்ச்சி

தெலுங்கானாவில் அதிர்ச்சி

இந்நிலையில் அதே பாணியில் தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பிரமுகரின் மகனும் இதேபோன்ற புகாரில் சிக்கியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாபேட்டை மாவட்டம் கோடாட் நகரில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வார்டு கவுன்சிலரின் மகனும், அவரது நண்பரும் சேர்ந்து 20 வயது பெண்ணை கடத்திச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட பெண் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றபோது இருவரும் கடத்திச் சென்று தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 20 வயது பெண், தனது தாயுடன் கோடாட்டில் வசிக்கிறார், வார்டு கவுன்சிலர் பாஷாவின் மகன் முகமது கவுஸ் பாஷா மற்றும் அவரது நண்பர் சாய்ராம் ரெட்டி ஆகியோர் ஆட்டோ ரிக்ஷாவில் கடத்திச் சென்றனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் அடைத்து வைத்து பல சந்தர்ப்பங்களில் கற்பழித்தனர்.

பலாத்கார வழக்கு பதிவு

பலாத்கார வழக்கு பதிவு

பாதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை சுயநினைவு பெற்று, கடத்தியவர்களிடமிருந்து தப்பினார். அவர் தனது தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விளக்கினார், பின்னர் அவர்கள் காவல்துறையை அணுகினர். அவர்களின் புகாரின் அடிப்படையில், குற்றவாளிகள் இருவர் மீதும் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோடாட் வட்ட ஆய்வாளர் நரசிம்மராவ் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குற்றவாளிகள் கைது

குற்றவாளிகள் கைது

மேலும் விசாரணை நடந்து வருகிறது, என்றார். இதற்கிடையில், போலீசார் ஏற்கனவே பாஷா மற்றும் சாய்ராம் ரெட்டியை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. தாக்குதலின் போது காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு வங்கத்தை தொடர்ந்து நடந்துள்ள இந்த சம்பவத்தை பாஜக கையிலெடுத்துள்ள நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+