வீட்டு செலவுக்கு வைத்திருந்த பணத்தில் புதிய மொபைல்..மனைவி திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்த கணவர்
ஹைதராபாத்: வீட்டுச் செலவுகளுக்கு வைத்திருந்த பணத்தைக் கொண்டு புதிய மொபைல்போன் வாங்கியதற்காக மனைவி திட்டியதால், தெலங்கானாவில் பெயின்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் அட்டவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேஷ் (35). இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பெயிண்டரான மல்லேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை, வீட்டிலிருந்த பணத்தைக் கொண்டு புதிய மொபைல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
வீட்டுச் செலவுகளுக்கு வைத்திருந்த பணத்தை எடுத்து மல்லேஷ் புதிய செல்போனை வாங்கியதால், இது தொடர்பாக அஞ்சுவுக்கும் மல்லேஷுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற, ஆத்திரமடைந்த மல்லேஷ், பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார். கிராமத்தின் வெளியே சென்ற மல்லேஷ், அங்கிருந்த குளத்தின் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாதாகக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை தான், அந்த வழியே சென்ற உள்ளூர் மக்கள் சடலத்தை முதலில் பார்த்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications