பெங்களூர்-எர்ணாகுளம் ரயில் விபத்து: கேரளாவைச் சேர்ந்த 12 பேர் பலி- முதல்வர் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் கேரளாவைச் சேர்ந்த 12 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் உம்மண் சாடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளதாவது:
ஓசூர் அருகே நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து கர்நாடகா உள்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசினேன். கேரளாவைச் சேர்ந்த 12 பேர் பலியாகி இருப்பதாக அவர் கூறினார்.
சம்பவ இடத்தில் இருந்து 7 உடல்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கேரளாவில் சிகிச்சை பெற விரும்பினால் அவர்களுக்கான ஆம்புலன்ஸ் வசதிகளை செய்து தர கர்நாடக அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்டன
இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த மூவரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தியார ஆண்டனி (வயது 57), திரிசூரைச் சேர்ந்த ஆமன் (9), எர்ணாகுளத்தைச் சேர்ந்த தேவசி (60) ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் ஆமனின் தாய் ஷர்மிளா மிகவும் ஆபத்தான நிலையில் ஆனைக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருவனந்தபுரம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்பவ இடத்துக்கு விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தோரின் உறவினர்களை அழைத்துச் செல்ல அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கும் கேரளா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் திருவாச்சூர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications