லாட்டரியில் ரூ.3.5 கோடி விழுந்ததாக கூறி மும்பை பெண்ணிடம் ரூ.11.5 லட்சம் பறித்த 2 நைஜீரியர்கள் கைது
மும்பை: மும்பையை சேர்ந்த பெண் ஒருவருக்கு இங்கிலாந்து லாட்டரியில் ரூ.3.5 கோடி பரிசு விழுந்திருப்பதாகக் கூறி அவரிடம் ரூ.11.50 லட்சம் பணம் பறித்த நைஜீரியாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவைச் சேர்ந்த எஃப்பி வில்லியம் இஸே(35) மற்றும் இமானுவேல் (எ) ஜான் டிக்சன்(42) ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். அவர்கள் இங்கிலாந்து லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக புனே, பெங்களூர் மற்றும் டெல்லியில் உள்ள பலருக்கு இமெயில் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மும்பை மாஹிம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இல்லத்தரசியான அவரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இந்நிலையில் தான் எஃப்பி, இமானுவேல் ஆகியோர் இங்கிலாந்து லாட்டரியில் ரூ.3.5 கோடி பணம், கார் விழுந்திருப்பதாக அந்த பெண்ணுக்கு இமெயில் அனுப்பினர். இந்த பரிசை பெற வேண்டுமானால் அவரின் முகவரி, வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி வைக்குமாறு கடந்த ஜனவரி மாதம் இமெயில் அனுப்பியுள்ளனர்.
இந்த இமெயிலை உண்மை என்று நம்பிய அந்த பெண்ணும் தனது முகவரி மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அனுப்பினார். இதையடுத்து பரிசு பணத்தை விடுவிக்க இங்கிலாந்து அரசுக்கு ரூ.4 லட்சம் அளிக்க வேண்டும். அதனால் அந்த தொகையை அனுப்பி வைக்குமாறு அந்த 2 பேரும் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணும் ரூ.4 லட்சம் அளித்துள்ளார். அதன் பிறகு அந்த 2 பேரும் அந்த பெண்ணின் பெயரில் போலி ஏ.டி.எம். கார்டு எடுத்து அனுப்பி வைத்து பணம் அதில் போடப்பட்டுவிட்டதாகக் கூறி மேலும் ரூ.4 லட்சம் கேட்டுள்ளனர். இந்த ரூ.4 லட்சம் ஸ்டாம்ப் வரி உள்ளிட்டவைக்காக என்று தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் அவர்கள் தெரிவித்ததை எல்லாம் நம்பி ஆறு மாதங்களில் ரூ.11.50 லட்சம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு தான் அவர் போலீசில் புகார் கொடுத்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எஃப்பி மற்றும் இமானுவேல், எஃப்பியின் இந்திய மனைவி மற்றும் 5 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 11 செல்போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications