லாட்டரியில் ரூ.3.5 கோடி விழுந்ததாக கூறி மும்பை பெண்ணிடம் ரூ.11.5 லட்சம் பறித்த 2 நைஜீரியர்கள் கைது
மும்பை: மும்பையை சேர்ந்த பெண் ஒருவருக்கு இங்கிலாந்து லாட்டரியில் ரூ.3.5 கோடி பரிசு விழுந்திருப்பதாகக் கூறி அவரிடம் ரூ.11.50 லட்சம் பணம் பறித்த நைஜீரியாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவைச் சேர்ந்த எஃப்பி வில்லியம் இஸே(35) மற்றும் இமானுவேல் (எ) ஜான் டிக்சன்(42) ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். அவர்கள் இங்கிலாந்து லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக புனே, பெங்களூர் மற்றும் டெல்லியில் உள்ள பலருக்கு இமெயில் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மும்பை மாஹிம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இல்லத்தரசியான அவரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இந்நிலையில் தான் எஃப்பி, இமானுவேல் ஆகியோர் இங்கிலாந்து லாட்டரியில் ரூ.3.5 கோடி பணம், கார் விழுந்திருப்பதாக அந்த பெண்ணுக்கு இமெயில் அனுப்பினர். இந்த பரிசை பெற வேண்டுமானால் அவரின் முகவரி, வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி வைக்குமாறு கடந்த ஜனவரி மாதம் இமெயில் அனுப்பியுள்ளனர்.
இந்த இமெயிலை உண்மை என்று நம்பிய அந்த பெண்ணும் தனது முகவரி மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அனுப்பினார். இதையடுத்து பரிசு பணத்தை விடுவிக்க இங்கிலாந்து அரசுக்கு ரூ.4 லட்சம் அளிக்க வேண்டும். அதனால் அந்த தொகையை அனுப்பி வைக்குமாறு அந்த 2 பேரும் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணும் ரூ.4 லட்சம் அளித்துள்ளார். அதன் பிறகு அந்த 2 பேரும் அந்த பெண்ணின் பெயரில் போலி ஏ.டி.எம். கார்டு எடுத்து அனுப்பி வைத்து பணம் அதில் போடப்பட்டுவிட்டதாகக் கூறி மேலும் ரூ.4 லட்சம் கேட்டுள்ளனர். இந்த ரூ.4 லட்சம் ஸ்டாம்ப் வரி உள்ளிட்டவைக்காக என்று தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் அவர்கள் தெரிவித்ததை எல்லாம் நம்பி ஆறு மாதங்களில் ரூ.11.50 லட்சம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு தான் அவர் போலீசில் புகார் கொடுத்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எஃப்பி மற்றும் இமானுவேல், எஃப்பியின் இந்திய மனைவி மற்றும் 5 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 11 செல்போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications