வயிற்றில் கரு.. அரியவகை பிரச்சினையுடன் பிறந்த ஆண் குழந்தை... அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
பிறந்து 20 நாளே ஆன ஆண் குழந்தையின் வயிற்றில் இருந்த கரு அகற்றம்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையின் வயிற்றில் இருந்த கரு அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டது.
அகமதாபாத்தை அடுத்த சனந்த் எனும் ஊரைச் சேர்ந்த தம்பதியருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் வயிறு பிறந்தது முதலே வீக்கத்துடன் காணப்பட்டது. இதனால் அச்சமடைந்த பெற்றோர் மருத்துவரை அணுகி பரிசோதித்தனர். சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அந்த குழந்தையின் வயிற்றில் முழுமையாக வளர்ச்சி அடையாத கரு ஒன்று இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். இந்த அரிய வகை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதென மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் கடந்த மாத இறுதியில் அந்த ஆண் குழந்தையின் வயிற்றில் இருந்த வளர்ச்சி அடையாத சிசு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
வெளியே எடுத்து பார்த்தபோது, வளர்ச்சி அடையாத கைகள் மற்றும் முதுகுதண்டு பகுதியுடன் அந்த சிசு இருந்தது. ஒரு வாரக்கால தொடர் சிகிச்சைக்கு பிறகு அந்த ஆண் குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது.
மருத்துவத்துறையில் இது மிகவும் அரிதான ஒரு பிரச்சினை. 5 லட்சம் பேரில் ஒருவருக்குத்தான் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. மருத்துவ வரலாற்றில் இதுவரை சுமார் 200 பேருக்கு தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தாயின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் உருவாகும் போது, ஒரு குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை உருவாகியிருப்பதாக மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications