கர்நாடகாவில் புதையலுக்காக கேரள சிறுவனை உயிரோடு புதைத்து நரபலி கொடுக்க முயற்சி- 7 பேர் கைது
கர்நாடகாவில் புதையலுக்காக சிறுவனை உயிரோடு புதைக்க முயற்சித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
மைசூர்: புதையலுக்காக கேரளா மாநில சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்ததாக 7 பேரை கர்நாடகா போலீசார் கைது செய்துள்ளனர்.
மைசூர் அருகே எம்மரகாலாவைச் சேர்ந்த சுதீந்திராவிடம் சிறுவனை உயிரோடு புதைத்து நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என ஒரு ஜோதிடர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனை நரபலிக்காக கடத்தி வந்துள்ளது சுதீந்தரா அண்ட் கோ.

சுதீந்தராவின் சந்தேகமான நடவடிக்கை குறித்து பொதுமக்கள் போலீசில் தெரிவித்தனர். இதையடுத்து சுதீந்தராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதன் முதல் கட்ட விசாரணையில் சிறுவனை புதையலுக்காக நரபலி கொடுக்க இருந்ததாக ஒப்புக் கொண்டார் சுதீந்தரா. இதையடுத்து சுதீந்தரா, ஜோதிடர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது கேரளா சிறுவன், இந்த கும்பலிடம் சிக்கியது எப்படி என விசாரித்து வருகின்றனர் போலீசார்












Click it and Unblock the Notifications