தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட நாடு முழுவதும் 75 ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது: மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: நாடு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினருடன் தொடர்புடைய 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹன்ஸ்ராஜ் ஆஹிர் மாநிலங்களவையில் கூறியதாவது: தேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் மாநில போலீசார் அளித்த தகவல்கள் படி நாடு முழுவதும் ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 21 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள், 16 பேர் தெலுங்கான மாநிலத்தை சேர்ந்தவர்கள், 9 பேர் கர்நாடக, 8 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள், 6 பேர் மத்திய பிரதேசம், 4 பேர் உத்தரகாண்ட், 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள், 2 பேர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள், மேற்கு வங்காளத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications