50 பேர் சீரழித்தனர்.. கேரள சிறுமியின் பரபரப்பு புகார்.. மலையாள டிவி நடிகர்களுக்கும் தொடர்பு?
கேரள மாநில சிறுமி ஒருவர் 50 பேரால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து விபசார கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சிறுமி ஒருவர், விபசார கும்பலிடம் சிக்கி கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த சிறுமி தற்போது 7 மாத கர்ப்பமாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம் அருகே குத்திக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி விழிம்பில்சாலா போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரை கண்ட போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த புகாரில், விழிம்பில் சாலா பகுதியைச் சேர்ந்த விஷ்ணுசாகர் ,28 என்ற இளைஞர் தன்னை காதலித்து, அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை சீரழித்து விட்டார்.

7 மாத கர்ப்பம்
விஷ்ணுசாகர் தன்னுடன் பலமுறை நெருக்கமாக இருந்ததால் தற்போது தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், ஆனால் தன்னை அந்த இளைஞர் திருமணம் செய்ய மறுப்பதாகவும் அந்த புகாரில் சிறுமி கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுசாகரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

விபசார கும்பலிடம்...
இதுகுறித்து விஷ்ணு சாகர் போலீஸில் கூறுகையில் தன் மீது பலாத்கார புகார் கூறிய சிறுமி விபசார கும்பலிடம் சிக்கி சீரழிக்கப்பட்டவர். அவரை கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலாத்காரம் செய்துள்ளதாக அவர் கூறினார்.

போலீஸ் விசாரணை
போலீஸார் மேலும் விசாரணை நடத்தியதில் குத்திக்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகலா (40) அந்த சிறுமியின் வறுமையை பயன்படுத்தி பணத்தாசைக் காட்டி அவரை விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார் என்பதும் அவருக்கு உடந்தையாக ஷாஜிதாபீவி (45). ஆட்டோ டிரைவர்கள் சதாசிவன் (64), சுரேஷ் (24) ஆகியோரும் செயல்பட்டு உள்ளதும் தெரியவந்தது.

ஆட்டோவிலேயே...
விபசாரத்துக்காக அந்த சிறுமியை ஆட்டோ டிரைவர்கள் சதாசிவன், சுரேஷ் ஆகியோர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஆட்டோவிலேயே அந்த சிறுமியை அவர்கள் இருவரும் சீரழித்தனர். இந்த நிலையில் விஷ்ணுசாகரும் விபசாரத்துக்காக சிறுமியை தேடி சென்றுள்ளார்.

கர்ப்பம்
அந்த சிறுமியுடன் பலமுறை விஷ்ணு சாகர் நெருக்கமாக இருந்ததால் அவர் கர்ப்பமானார். இதனால் அந்த சிறுமியை விஷ்ணுசாகர் திருமணம் செய்து கொள்ள அந்த கும்பல் நிர்பந்தித்தபோது அவர் சம்மதிக்காததால் அந்த சிறுமியை தூண்டிவிட்டு இளைஞர் மீது பாலியல் புகார் கூறியதும் தெரியவந்தது.

4 பேர் கைது
இதைத் தொடர்ந்து விபசார கும்பலைச் சேர்ந்த ஸ்ரீகலா, ஷாஜிதாபீவி, சதாசிவன், சுரேஷ் ஆகியோரை கைது செய் தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது அந்த சிறுமியை சீரழித்தவர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. கேரள டிவி நடிகர்கள் சிலரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்த தகவலும் போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications