இந்து பெயர் வைத்துள்ளதாக கூறி..முஸ்லிம் நடத்திய ஹோட்டலை அடித்து நொறுக்கிய கும்பல்.. உ.பி.யில் ஷாக்!
மதுரா: உத்தரபிரதேசத்தில் இந்து பெயரில் ஹோட்டல் நடத்துவதாக கூறி முஸ்லிம் ஹோட்டலை மர்ம கும்பல் அடித்து நொறுக்கினார்கள்,. இது தொடர்பாக புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா விகாஸ் மார்க்கெட்டில் இர்பான் என்பவர் 'ஸ்ரீநாத்' என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஒரு முஸ்லிம் இந்து பெயரில் எப்படி உணவகம் நடத்தலாம்? எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

கும்பல் அராஜகம்
இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி இந்த ஹோட்டலுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், ஹோட்டலுக்கு 'ஸ்ரீநாத்' என்று ஏன் பெயரிடப்பட்டது என்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் 'ஸ்ரீநாத்' என்ற பெயர் கொண்ட ஹோட்டலின் பேனர்களை கிழித்து எறிந்தும், டேபிள்களை தூக்கி எறிந்தும், அடித்து நொறுக்கியும் அராஜகம் செய்துள்ளனர். மேலும், 'ஸ்ரீநாத்' என்று பெயரிடப்பட்டுள்ளதால், ஹோட்டலுக்கு இந்துக்கள் சாப்பிட வருவார்கள்.

பொருளாதார ஜிஹாத்
எனவே விகாஸ் மார்க்கெட்டில் இனிமேல் ஹோட்டல் நடத்தக்கூடாது என்று மிரட்டலும் விடுத்துச் சென்றனர். இந்த கும்பலை வழிநடத்திய தேவராஜ் பண்டிட் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், ' இவரை(இர்பான்) போன்றவர்களால் இந்துக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. சனாதன தர்மத்தின் உதவியை நாடும் இத்தகைய விற்பனையாளர்களுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும் என்றும் இது பொருளாதார ஜிஹாத் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போலீசில் புகார்
இந்த சம்பவம் தொடர்பாக மதுராவின் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஹோட்டலின் உரியமையாளர் இர்பான் கூறியதாவது:- நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹோட்டலை நடத்தி வருகிறோம். இதுவரையிலும் பெயரில் எந்த பிரச்சனையும் இல்லை.

கற்பனை கூட செய்யவில்லை
ஒரு பெயரில் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று நாங்கள் கற்பனை கூட செய்யவில்லை. ஹோட்டலுக்கு வந்த மர்ம கும்பல் பேனர்களை கிழித்து முஸ்லீம் மக்கள் இந்து பெயருடன் ஒரு கடையை நடத்த முடியாது என்று கூறினார்கள். இந்த பெயரில்தான் அவர்களுக்கு பிரச்சினையே உள்ளது என்று இர்பான் கூறினார். முஸ்லிம் ஹோட்டலை சூறையாடிய சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications