2 டோஸ் தடுப்பூசியும் போட்ட பெண் டாக்டருக்கு ஒரே நேரத்தில் 2 வகை கொரோனா பாதிப்பு! ஈஸியாக குணமடைந்தார்
கவுகாத்தி: அசாமில் ஒரு பெண் மருத்துவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் இவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவராம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் திப்ருகரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (ஆர்.எம்.ஆர்.சி) இவருக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் பெண் மருத்துவர் இரண்டு வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு கொரோனா வைரஸின் ஆல்பா மற்றும் டெல்டா வகைகளால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

குணமடைந்தார்
அதேநேரம், மோசமான வகையில் அவர் உடல்நிலை பாதிக்கப்படவில்லை. லேசான அறிகுறிகள் இருந்துள்ளது. மருத்துவமனையில் சேராமல் வீட்டிலிருந்தே குணமடைந்தார். தடுப்பூசி வேலை செய்ததால்தான் லேசான பாதிப்புடன் பெண் டாக்டர் குணமடைந்தார் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

எப்படி பரவியது
"இரண்டு வகைகள் ஒரே நேரத்தில் அல்லது மிகக் குறுகிய காலத்திற்குள் ஒரு நபரை பாதிக்கும்போது இரட்டை தொற்று ஏற்படுகிறது. யாரோ பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இது நடக்கிறது. ஆனால் முதல் நோய்த்தொற்றின் 2-3 நாட்களுக்குள் மற்றும் ஆன்டிபாடிகள் உருவாகுவதற்கு முன்பு மற்றொரு கொரோனா பாதித்த நபரிடமிருந்து வேறு வகை கொரோனா இவருக்கு பரவியிருக்கலாம். எனவே இரு வகை கொரோனாவும் உடலில் இருந்திருக்கும் "என்று ஆர்.எம்.ஆர்.சி.யின் மூத்த விஞ்ஞானி டாக்டர் பி ஜே போர்ககோட்டி தெரிவித்துள்ளார்.

மருத்துவர்
மருத்துவ தொழிலில் இருப்பதால் அடிக்கடி நோயாளிகளை சந்திக்க வேண்டியிருக்கும் சூழ்நிலையில் இது போல உடனடியாக இரண்டு வகை வைரஸ் தாக்கி இருக்கக்கூடும் என்று சொல்கிறார்கள். இது மிகவும் அரிதான நிகழ்வு என்பதால் சாமானிய மக்கள் அது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இரு வகை வைரஸ் தாக்கத்தில் அசாம்
இந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அசாமில் இரண்டாவது அலையின் ஆரம்ப கட்டத்தில், பெரும்பாலான கொரோனா கேஸ்கள் ஆல்பா உருமாற்ற வைரஸ் காரணமாக இருந்தன என்று மேலும் அவர் கூறினார். ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, டெல்டா நோய்த்தொற்றுகள் தொடர்பான கேஸ்கள் வெளிவரத் தொடங்கின.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications