இரட்டை இலைக்கு லஞ்சம்: சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி தனி நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது.
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தியபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 70 லட்சம், இரு சொகுசு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்றதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அனைவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோர் 35 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்டவரான சுகேஷ் தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கடந்த மே மாதம் 23ஆம் தேதி டெல்லி தனி நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி தள்ளுபடி செய்தார். ஜூன் 10 ஆம் தேதி இரண்டாவது முறையாக ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சுகேஷ் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. சுகேஷ் ஜாமீன் மனு 3வது முறையாக டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி போலீசார் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் மனுதாரர் முதன்மையாக குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். டிடிவி தினகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால் இவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
போலீசாரின் ஆவணங்களின் அடிப்படையில் இது தொடர்பாக நடந்த கூட்டுச்சதியில் மனுதாரர் ரூ.2 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அதில் ரூ.1.70 கோடி அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை அடிப்படை விஷயங்களில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூடியுள்ளது. மூன்றாவது முறையாக சுகேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications