கொரோனாவை பரப்பிவிட்ட கும்பமேளா போதாதாம்... இமயமலை யாத்திரைக்கும் அனுமதி கொடுத்தது உத்தரகாண்ட் அரசு
டேராடூன்: கொரோனா 2-வது அலை பல மாநிலங்களில் உச்சவேகத்தில் பரவுவதற்கு ஹரித்வார் கும்பமேளாவை நடத்தியதும் ஒரு காரணம். இந்த நிலையில் இமயமலையில் 4 புனித தலங்களுக்கான சார் தாம் யாத்திரைக்கும் உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் மோசமான நிலைமையை உருவாக்கி உள்ளது. உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகம்.
கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கொரோனா நோயாளிகளுக்கான மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

ஹரித்வார் கும்பமேளா
இப்படியான சூழலில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பல லட்சம் பேர் பங்கேற்ற இந்துக்களின் புனித நிகழ்வான கும்பமேளா நடத்தப்பட்டது. கொரோனா பரவலுக்கு மத்தியில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் பல லட்சம் பேர் ஹரித்வாரில் ஒன்று கூடியதால் கொரோனா பரவல் அதி உச்சத்தை அடைந்தது.

சர்ச்சை பேச்சு
ஆனால் உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத், ஹரித்வாரில் ஓடும் கங்கை மாதா தெய்வம் நம்மை காப்பாற்றும்ல் கொரோனா பாதிப்பு வராது என பேசினார். வேறுவழியே இல்லாமல் பிரதமர் மோடி தலையிட்டு சாதுக்களின் அமைப்புகளான அகாடாக்களின் தலைவர்களிடம் பேசி ஹரித்வாரை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் வைத்தார்.

திணறிய மாநில அரசுகள்
ஹரித்வாரில் இருந்து பல மாநிலங்களுக்கு திரும்பியவர்களால் கொரோனா பரவிவிட்டது. அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்தும் பல மாநில அரசுகள் ஹரித்வாரில் இருந்து திரும்பிய சாதுக்களை கண்காணிக்க முடியவில்லை.

இமயமலை யாத்திரை
இப்போது கொரோனா பரவல் அதி உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய 4 புனித தலங்களுக்கான சார் தாம் யாத்திரைக்கு உத்தரகாண்ட் அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் மிக மோசமாக இருக்கும் நிலையில் சார் தாம் யாத்திரைக்கு உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதித்திருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாக்கி உள்ளது.

மே 3 முதல் சார் தாம் யாத்திரை
ஆனால் உத்தரகாண்ட் மாநில அரசோ, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள்தான் அனுமதிக்கப்படுவர்; கட்டுப்பாடுகளை நாங்கள் விதித்திருக்கிறோம்; கொரோனா பரவாது என மீண்டும் விளக்கம் அளித்து வருவது குறிப்பிடத்தக்க்கது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications