மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியில்லை: அமித்ஷா திட்டவட்டம்
டெல்லி: மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கான தேர்தலில் பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிடாமல் பிரம்மாண்ட கூட்டணியை அமைக்கும் என்று அக்கட்சித் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தேர்தலில் எப்படியும் வென்றுவிடுவோம் என்று பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. இதனாலேயே இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் டெல்லியில் மகாராஷ்டிரா மாநில பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனித்துப் போட்டியிடுவோம் என்ற பேச்சுக்கே இடம் வேண்டாம்.. பாஜக, சிவசேனா, குடியரசுக் கட்சி உள்ளிட்டவற்றுடன் சிறிய கட்சிகளையும் இணைத்து பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துதான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.
அதாவது காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வியூகம் என்றும் அமித்ஷா கூறியிருக்கிறார். மேலும் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் உடனே முன்னெடுத்து செயல்படுமாறும் பாஜக நிர்வாகிகளை அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications