குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து... ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: ஜெகன் மோகன் ரெட்டி
அமராவதி: தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த ராணுவ வீரர் சாய்தேஜா குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்பது தனது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பதிவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே டிசம்பர் 8ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின்ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்தில் தப்பிய வருண்சிங் என்ற ராணுவ அதிகாரி மட்டும் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார். பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் சாய் தேஜாவும் ஒருவர். இவர் பிபின் ராவத்தின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவர். இந்நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் லான்ஸ் பி சாய் தேஜாவின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஜெகன்மோகன் ரெட்டி உறுதிப் படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications