தொலைபேசி ஒட்டுக் கேட்பு பஞ்சாயத்து- தெலுங்கானா போலீஸ் பாதுகாப்பு தூக்கிப் போட்ட 'நாயுடு'
ஹைதராபாத்: தமது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து தெலுங்கானா போலீஸ் அளித்து வந்த பாதுகாப்பை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தூக்கி எறிந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டு போட எம்.எல்.ஏ. ஸ்டீபன்சனுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் அவரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியானது. தெலுங்கு டிவி சேனல்கள் இதை ஒளிப்பரப்பி பரபரப்பை ஏற்படுத்தின.

இதன் மூலம் தமது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்தார். மேலும் மாநில அமைச்சர்கள், உறவினர்கள், உயர் அதிகாரிகள் 120 பேரின் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாகவும் உளவுத்துறை தகவல் தெரிவித்தது.
ஆனால் இந்த புகாரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மறுத்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் பேச்சு ஸ்டீபன்சன் செல்போனில் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கலாம். சந்திரபாபு நாயுடுவை இதில் சிக்க வைப்பதற்காக ஸ்டீபன்சன் எம்.எல்.ஏ.வின் செல்போனில் திட்டம் போட்டு டேப் செய்யப்பட்டிருக்கலாம். அவர்களே அதை டிவி சேனலுக்கு அனுப்பி இருக்கலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு இதுவரை ஆந்திரா மாநில போலீசாரும், தெலுங்கானா மாநில போலீசாரும் இணைந்து பாதுகாப்பு கொடுத்து வந்தனர். சந்திரபாபு நாயுடுவின் வீட்டில் வெளிப்புற பாதுகாப்பு பணியில் தெலுங்கானா மாநில போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
வீட்டுக்குள் பாதுகாப்பை ஆந்திர மாநில போலீசார் கவனித்து வந்தனர். தற்போது தெலுங்கானா அரசு கொடுக்கும் தெலுங்கானா போலீசாரின் பாதுகாப்பை சந்திரபாபு நாயுடு உதறியுள்ளார். அவர் வீடு மற்றும் கட்சி அலுவலகம் முழுவதிலும் ஆந்திரா போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டு போட எம்.எல்.ஏ. ஸ்டீபன்சனுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் அவரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியானது. தெலுங்கு டிவி சேனல்கள் இதை ஒளிப்பரப்பி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் தமது வீட்டுக்கு தெலுங்கானா போலீஸ் அளித்து வந்த பாதுகாப்பை நிராகரித்திருக்கிறார் சந்திரபாபு.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications