ப்ரைம் டைமில் நோ கன்னட சினிமா! சிஎம் சொல்லியும் கேட்காத பெங்களூர் மல்டிபிளக்ஸ் தியேட்டர் அதிபர்கள்!!
பெங்களூர்: பெங்களூருவில் திரையரங்குகளில் கன்னட படங்களை திரையிட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கேட்டுக் கொண்டதை மல்டிபிளக்ஸ் தரப்பு ஏற்க மறுத்துவிட்டது.
பெங்களூருவில் ‘மல்டிபிளக்ஸ்‘ திரையரங்குகளில் கன்னட சினிமாக்களை, மக்கள் அதிகம் வரும் நேரங்களில், திரையிடுவதில்லை என்பது கன்னட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் புகாராகும்.
இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க முதல்வர் சித்தராமையா தலைமையில், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ரோஷன் பெய்க் மற்றும் மூத்த அமைச்சர்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் முதல்வரின் அலுவலக இல்லமான ‘கிருஷ்ணா‘வில் நடைபெற்றது.

முதல்வர் கோரிக்கை
இந்த கூட்டத்தில் சித்தராமையா கூறுகையில் "பெங்களூருவில் எந்த சூழ்நிலை வந்தாலும் கன்னட திரைப்படங்களை திரையிட முன்னுரிமை அளிக்க வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள் காரணம் எதுவும் சொல்லாமல், கன்னட திரைத்துறை வளர்ச்சிக்கு உதவ வேண்டும். எதுவாக இருந்தாலும் முக்கியமான நேரங்களில் கன்னட சினிமாவை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும். டிக்கெட் கட்டணம், தின்பண்டங்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும். கடந்த பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புப்படி 300 திரையரங்குகள் கட்டும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்" என்று சித்தராமையா பேசினார்.

கன்னட படம் ஓடுவதில்லை
‘மல்டிபிளக்ஸ்‘ திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பு பேசும்போது "அதிக செலவு செய்து திரையரங்குகளை கட்டி உள்ளோம். கன்னட படங்களை மட்டும் வெளியிட்டால் அவை சரியாக ஓடுவது இல்லை என்றும், இதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உண்டாகிறது" என்றும் தெரிவித்தனர்.

தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு
இதை கன்னட திரைத்துறை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஏற்க மறுத்தனர். தியேட்டர் உரிமையாளர்கள் அரசை ஏமாற்றி வரி விலக்கு பெறுகிறார்கள். கன்னட படங்களுக்கு வரிச்சலுகை கிடைப்பதால், திரையரங்குக்கு வெளியே கன்னட போஸ்டர்களை ஒட்டிவிட்டு உள்ளே வேறு மொழி படங்களை திரையிட்டு அதிகளவில் வரி விலக்கு பெறுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.

பேச்சுவார்த்தை தோல்வி
பேச்சுவார்த்தையின் இறுதியில், சித்தராமையாவின் வேண்டுகோளை ஏற்க இயலாது என்று கூறி திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். இதையடுத்து அமைச்சர் ரோஷன் பெய்க் தலைமையில் மீண்டும் ஒரு முறை கூட்டம் நடத்தி இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும்படி சித்தராமையா உத்தரவிட்டார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications