3 மணி நேரம் உணவகங்கள் செயல்பட அனுமதி.. முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
உணவு விடுதிகள் 3 மணி நேரம் இயங்க மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில், தடுப்பூசி செலுத்திய ஊழியர்களை கொண்டு, உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தையும் கொரோனாவைரஸ் விட்டு வைக்கவில்லை.. எனவே, அந்த மாநிலத்திலும் வருகிற 15ந் தேதி வரை லாக்டவுன் போடப்பட்டுள்ளது..
அதேசமயம், மாநில மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பல அறிவிப்புகளையும் மம்தா அறிவித்தும் வருகிறார்.

நேற்றுகூட, பல்வேறு வர்த்தக அமைப்பு பிரதிநிதிகளுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார்.. அந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, "இதுவரை மாநிலத்தில் 1.4 கோடி இலவச கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது
தொற்று குறைந்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களுடன் உணவு விடுதிகள் தினமும் 3 மணி நேரம் செயல்படலாம்.. எனவே, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.. லாக்டவுன் முடிந்தவுடன் 25 சதவீத ஊழியர்களுடன் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.
வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்களின் மாநில மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள உதவ வேண்டும்.. ஏனென்றால், ஒட்டுமொத்த மக்களுக்கும் மாநில அரசே தடுப்பூசி போட முடியாது... இத்தகைய பணிகளுக்காக வர்த்தக நிறுவனங்களும் உதவி செய்ய முன்வர வேண்டும்" என்றார்.
உணவு விடுதிகள் 3 மணி நேரம் திறந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாக மம்தா அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.. ஆனால் அதேசமயம், இந்த அறிவிப்பு எப்போது முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications