பீகார் சட்டசபை தேர்தல்: நக்சல்கள் உட்பட 900 பேர் கைது... மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நக்சலைட்டுகள், கிரிமினல்கள் என சந்தேகிக்கப்படுவோர் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்தலை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரில் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நவம்பர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இத்தேர்தலின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நக்சலைட்டுகள், கிரிமினல்கள் என சந்தேகிக்கப்படுவோர் 900 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நக்சல் பகுதிகளில் 15 என்கவுண்ட்டர் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
தேர்தல்களை சீர்குலைக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 105 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 5 கையெறி குண்டுகள் உட்பட 40 சட்டவிரோத ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பீகாரின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நக்சல்கள் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். குறிப்பாக ஜமுய், ஜெகனாபாத், அவுரங்காபாத் மற்றும் கயா உள்ளிட்ட நக்சல்கள் ஆதிக்கம் உள்ள மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுஷில்குமார் மோடி மீது வழக்கு
இதனிடையே பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications