பீகார் சட்டசபை தேர்தல்: நக்சல்கள் உட்பட 900 பேர் கைது... மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நக்சலைட்டுகள், கிரிமினல்கள் என சந்தேகிக்கப்படுவோர் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்தலை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரில் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நவம்பர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இத்தேர்தலின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நக்சலைட்டுகள், கிரிமினல்கள் என சந்தேகிக்கப்படுவோர் 900 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நக்சல் பகுதிகளில் 15 என்கவுண்ட்டர் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
தேர்தல்களை சீர்குலைக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 105 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 5 கையெறி குண்டுகள் உட்பட 40 சட்டவிரோத ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பீகாரின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நக்சல்கள் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். குறிப்பாக ஜமுய், ஜெகனாபாத், அவுரங்காபாத் மற்றும் கயா உள்ளிட்ட நக்சல்கள் ஆதிக்கம் உள்ள மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுஷில்குமார் மோடி மீது வழக்கு
இதனிடையே பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications