பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவி ஜெயலலிதா.. பிஷப் காட்டன் பள்ளி முதல்வர் பெருமிதம் !
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அவர் படித்த பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெங்களூர்: மறைந்த ஜெயலலிதா பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவியாகவும், நல்ல தடகள வீராங்கனையாகவும் திகழ்ந்தவர் என்று அவர் படித்த பெங்களூர் பிஷப் காட்டன் பள்ளியின் முதல்வர் லாவண்யா மித்திரன் கூறியுள்ளார்.
கடந்த 1948 பிப்ரவரி 24-ல் மைசூரில் பிறந்தார் ஜெயலலிதா. தனது இரண்டு வயதில் தந்தையை இழந்தார். பின்னர் அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். 1952 முதல் 1958 -ம் ஆண்டு வரை பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு அவர் பயின்ற பிஷப் காட்டன் பள்ளியில் இன்று காலை இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவு குறித்து பிஷப் பள்ளியின் முதல்வர் லாவண்யா மித்திரன் கூறுகையில், மறைந்த ஜெயலலிதா இந்த பள்ளியில் தான் ஆரம்ப கல்வி பயின்றார். பள்ளியில் படித்த போது மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா, படிப்பு மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்த மாணவியாக விளங்கினார். பின்னாளில் அவர் முதல்வராக பதவியேற்ற போது அந்த விழாவில் இரண்டு முறை கலந்துகொண்டேன் என நினைவு கூறினார். மேலும் ஜெயலலிதா நான்காம் வகுப்பு படித்த போது சக மாணிவிகள், ஆசிரியருடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications