முழுசா ரத்து பன்னுங்க... இது நிரந்தர தீர்வு இல்ல! - அமித்ஷாவின் அறிவிப்புக்கு இரோம் ஷர்மிளா பதில்
இம்பால்: வட கிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முழுமையாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா வலியுறுத்தி இருக்கிறார்.
வட கிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அசாம், மணிப்பூரிலும் ஜம்மு காஷ்மீரிலும் ASFPA எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருந்து வருகிறது.
ராணுவத்தினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் வானளாவிய அதிகாரத்தை வழங்கும் இச்சட்டத்தால் பொதுமக்களைகூட பார்த்த இடத்தில் சுட்டுக் கொல்ல முடியும்.

நாகாலாந்தில் 14 பொதுமக்கள் சுட்டுக்கொலை
நாட்டை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய இச்சட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. கடந்த 2021 டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி நாகாலந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சில மாவட்டங்களில் ASFPA ரத்து
இதனை தொடர்ந்து ASFPA சட்டத்துக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்த மத்திய அரசு நாகாலாந்து, அசாம், மணிப்பூரின் சில மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்க முடிவு செய்து இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார்.

அடக்குமுறை சட்டம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அடக்குமுறை சட்டம் என்றார். "மக்களை கொல்லவும், வீடுகளை தாக்கவும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பலத்தால் மக்களை வெல்ல முடியாது. மக்களின் கிளர்ச்சியை கட்டுப்படுத்த சட்டம் தீர்வாக இருக்காது.

நிரந்தர தீர்வு அல்ல
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை சில பகுதிகளில் திரும்பப்பெறும் மத்திய அரசின் முடிவை வரவேற்கிறேன். இது நல்ல திசையை நோக்கி அழைத்துச் செல்லும் நேர்மறையான ஒரு முடிவு. ஆனால் இது நிரந்த தீர்வு அல்ல. இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்வதே முழு தீர்வை பெற்றுத் தரும்." என்றார்.

யார் இந்த இரோம் ஷர்மிளா?
கடந்த 2000 ஆம் ஆண்டு இம்பாலுக்கு அருகே மாலோம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் 10 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications