ப.சிதம்பரத்தின் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ ரெய்டு- ஷீனா போரா கொலையுடன் தொடர்பு?
ஷீனா போரா கொலை வழக்கில் ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கக் கூடும் என்பதற்காக ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை: ஷீனா போரா கொலையின் பின்புலத்தில் பணப்பிரச்சினை இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரிலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடு உள்பட 14 இடங்களில் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. மேலும் மும்பை வோர்லி பகுதியில் உள்ள பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

2007-2008-ஆம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருக்கலாம் என்பதே ப.சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு. இந்த நிறுவனமானது பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமானதாகும்.
இந்திராணி முகர்ஜியின் முதல் கணவருக்கு பிறந்த ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியும், பீட்டரும் சிறையில் உள்ளனர். இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் ஷீனா பெயரில் சிங்கப்பூரில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு தொடங்கியிருப்பது குறித்த விவரங்களையும் சிபிஐ சேகரித்து வருகிறது.
பண மோசடி புகாருக்கு இடையில் கடந்த 2009-இல் முகர்ஜி தம்பதி அவர்களது மீடியா தொழிலை விற்றுவிட்டதாகவும் சிபிஐ கூறுகிறது. வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ரூ.4 கோடி அன்னிய முதலீடு செய்ய அனுமதி அளித்த போதிலும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ரூ.305 கோடி முதலீடு செய்ய முகர்ஜி தம்பதிக்கு அனுமதி அளித்தார்.

எனவே ஷீனா போரா கொலையின் பின்புலத்தில் பணப்பிரச்சினை ஏதேனும் இருக்கக் கூடும் என்பதாலும் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோரது வீடுகளில் அது தொடர்பான ஆவணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications