தேர்தலுக்கு பிந்தைய கலவரம்; மேற்கு வங்க டிஜிபியிடம் தகவல்களை கேட்கிறது சிபிஐ

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா : மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது பதிவான அனைத்து கொலை, கொலை முயற்சி மற்றும் பலாத்கார வழக்குகள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு சிபிஐ மேற்கு வங்க காவல் துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகியது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

CBI seeks from WB DGP details of murder, rape cases reported during post-poll violence

மே 2 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்குப் பிறகு மிகப்பெரிய அரசியல் வன்முறை ஏற்பட்டது. கொலை,, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது. இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் . மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது பெண்களுக்கு எதிரான கொலைகள், பலாத்காரம் மற்றும் குற்றங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து கொலை, பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறையின் போது பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான வழக்குகளின் விவரங்களை மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குனருக்கு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளது.

மேற்கு வங்கத்தின் அரசியல் வன்முறையை விசாரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலா 4 குழுக்களை இணை இயக்குநர்கள் ராம்நிஷ், அனுராக், வினீத் விநாயக் மற்றும் சம்பத் மீனா தலைமையில் அமைத்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு துணை ஆய்வாளர் ஜெனரல் மற்றும் சுமார் நான்கு காவல்துறை கண்காணிப்பாளர்கள் இருப்பார்களாம். ஒட்டுமொத்த விசாரணையை கூடுதல் இயக்குனர் அஜய் பட்னாகர் கண்காணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+