சத்தீஸ்கரில் அமைதியாக நடந்த 2-வது கட்ட தேர்தல்- 75% வாக்கு பதிவு!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவடைந்தது. 2ம் கட்ட தேர்தலில் 75% வாக்குகள் பதிவாகி உள்ளன.
90 இடங்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டன. முதல் கட்ட தேர்தல் 18 தொகுதிகளில் கடந்த 11-ந்தேதி நடந்தது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த தேர்தலில் சாதனை அளவாக 75.53% வாக்குகள் பதிவாகின.
2-வது இறுதிக்கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்கள் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 80 ஆயிரம் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஓட்டுப்பதிவை கண்காணிக்க 3 ஆயிரம் கேமராக்கள் பொருத்தபட்டிருந்தன.

காலை முதல் நீண்ட வரிசை
ஆண்களும், பெண்களும் காலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் 10 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டன.

நண்பகலில் 30% வாக்கு பதிவு
நண்பகல் நிலவரப்படி சுமார் 30% வாக்குகள் பதிவாகின. பகல் 3 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகி இருந்தன.

75% வாக்கு பதிவு
வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாகவே நடந்து முடிந்தது. இறுதி நிலவரப்படி 74.65% வாக்குகள் பதிவானதாக தகவல்கள் கூறுகின்றன.

டிச.8-ல் வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 8-ந்தேதி நடக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications