1967-ல் 400 சீன ராணுவத்தினர் கொன்று குவிக்கப்பட்ட சிக்கிம் நாதுலா போர்க்களத்தை மறந்தது ஏனோ?
1967-ல் சிக்கிம் நாதுலா போர்க்களத்தில் 400 சீன ராணுவத்தினர் கொன்று குவிக்கப்பட்ட வரலாறை மறந்து சீனா பேசுவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டெல்லி: 1962-ம் ஆண்டு யுத்தம் பற்றி பேசி இந்தியாவை மிரட்டி வரும் சீனா 1967-ம் ஆண்டு சிக்கிமில் வாங்கிய மரண அடிகளைப் பற்றி பேசுமா? என பாதுகாப்பு வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பூடானின் டோக்லாம் பீடபூமியை கைப்பற்ற சீனா முயற்சிக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் நமது ராணுவம் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளது.
இதை கடுமையாக எதிர்க்கும் சீனா, 1962 யுத்தத்தில் இந்தியா சந்தித்த தோல்வியை சுட்டிக்காட்டி மிரட்டி வருகிறது. சீனா ஊடகங்களும் இதேபோல் எழுதி வருகின்றன.

சிக்கிமில் மரண அடி
ஆனால் சீனா வசதியாக 1967-ம் ஆண்டு இதே சிக்கிம் எல்லையில் மரண அடி வாங்கிய வரலாறை மறந்துவிடுகிறது என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள். ஆம் சிக்கிமின் நாதுலா மற்றும் சோ லா கணவாய் பகுதிகளில்தான் அந்த யுத்தம் நடைபெற்றது.

நாதுலாவில் ஊடுருவல்
1967-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நாதுலா கணவாய் பகுதியில் ஊடுருவியது சீனா. இதைத் தடுத்து நமது ராணுவம் தாக்குதலை நடத்தியது. 1967-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி வரை இந்த யுத்தம் நடைபெற்றது.

400 பேர் பலி
இதில் 400-க்கும் அதிகமான சீனா ராணுவத்தினர் கொன்று குவிக்கப்பட்டனர். நமது ராணுவத்தினர் 88 பேர் உயிர்த் தியாகம் செய்து மாவீரர்களாகினர்.

சோலா கணவாய்
அதே 1967-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி நாதுலா கணவாய் அருகே உள்ள சோ லா பகுதியிலும் சீனா ராணுவம் ஊடுருவ முயற்சித்தது. அப்போதும் நமது ராணுவத்தினர் சரியான பதிலடி கொடுத்து சீனாவை விரட்டியடித்தனர்.

வரலாறு மறந்த சீனா
இந்த வரலாறுகளை சீனா மறந்துவிட்டு 1962-ம் ஆண்டு யுத்தம் பற்றி மட்டுமே பேசுகிறது. இந்தியாவை ஊடகங்கள் மூலம் மிரட்டும் போக்கை கைவிட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டியது சீனாதான் என்கின்றனர் பாதுகாப்பு துறை வல்லுநர்கள்.
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications