1967-ல் 400 சீன ராணுவத்தினர் கொன்று குவிக்கப்பட்ட சிக்கிம் நாதுலா போர்க்களத்தை மறந்தது ஏனோ?
1967-ல் சிக்கிம் நாதுலா போர்க்களத்தில் 400 சீன ராணுவத்தினர் கொன்று குவிக்கப்பட்ட வரலாறை மறந்து சீனா பேசுவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டெல்லி: 1962-ம் ஆண்டு யுத்தம் பற்றி பேசி இந்தியாவை மிரட்டி வரும் சீனா 1967-ம் ஆண்டு சிக்கிமில் வாங்கிய மரண அடிகளைப் பற்றி பேசுமா? என பாதுகாப்பு வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பூடானின் டோக்லாம் பீடபூமியை கைப்பற்ற சீனா முயற்சிக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் நமது ராணுவம் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளது.
இதை கடுமையாக எதிர்க்கும் சீனா, 1962 யுத்தத்தில் இந்தியா சந்தித்த தோல்வியை சுட்டிக்காட்டி மிரட்டி வருகிறது. சீனா ஊடகங்களும் இதேபோல் எழுதி வருகின்றன.

சிக்கிமில் மரண அடி
ஆனால் சீனா வசதியாக 1967-ம் ஆண்டு இதே சிக்கிம் எல்லையில் மரண அடி வாங்கிய வரலாறை மறந்துவிடுகிறது என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள். ஆம் சிக்கிமின் நாதுலா மற்றும் சோ லா கணவாய் பகுதிகளில்தான் அந்த யுத்தம் நடைபெற்றது.

நாதுலாவில் ஊடுருவல்
1967-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நாதுலா கணவாய் பகுதியில் ஊடுருவியது சீனா. இதைத் தடுத்து நமது ராணுவம் தாக்குதலை நடத்தியது. 1967-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி வரை இந்த யுத்தம் நடைபெற்றது.

400 பேர் பலி
இதில் 400-க்கும் அதிகமான சீனா ராணுவத்தினர் கொன்று குவிக்கப்பட்டனர். நமது ராணுவத்தினர் 88 பேர் உயிர்த் தியாகம் செய்து மாவீரர்களாகினர்.

சோலா கணவாய்
அதே 1967-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி நாதுலா கணவாய் அருகே உள்ள சோ லா பகுதியிலும் சீனா ராணுவம் ஊடுருவ முயற்சித்தது. அப்போதும் நமது ராணுவத்தினர் சரியான பதிலடி கொடுத்து சீனாவை விரட்டியடித்தனர்.

வரலாறு மறந்த சீனா
இந்த வரலாறுகளை சீனா மறந்துவிட்டு 1962-ம் ஆண்டு யுத்தம் பற்றி மட்டுமே பேசுகிறது. இந்தியாவை ஊடகங்கள் மூலம் மிரட்டும் போக்கை கைவிட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டியது சீனாதான் என்கின்றனர் பாதுகாப்பு துறை வல்லுநர்கள்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications